புஷ்பா-2 பட நெரிசலில் சிக்கி பெண் மரணம்: மனித உரிமை ஆணையத்தில் புகார்

Theechudar - தீச்சுடர்
By -
0

ஹைதராபாத்: ஐதராபாத்தில் புஷ்பா-2 திரைப்படத் திரையிடலில் நெரிசலில் சிக்கி பெண் உயிரிழந்தது தொடர்பான புகாரை தேசிய மனித உரிமைகள் ஆணையம் ஏற்றுக்கொண்டது.

நடிகர் அல்லு அர்ஜுனின் புஷ்பா-2 திரைப்படம் கடந்த வியாழக்கிழமை உலகம் முழுவதும் வெளியானது. முன்னதாக புதன்கிழமை இரவு ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் பல திரையரங்குகளில் படத்தின் பிரீமியர் காட்சிகள் நடைபெற்றன. ஹைதராபாத்தில் உள்ள சந்தியா திரையரங்கில் நடந்த பிரீமியர் ஷோவில் நடிகர் அல்லு அர்ஜுன் கலந்து கொண்டார்.

இதனால் திரையிடலில் ரசிகர்களிடையே கைகலப்பு ஏற்பட்டது. இதையடுத்து போலீசார் தடியடி நடத்தி ரசிகர்களை கலைத்தனர். அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் ரேவதி என்ற பெண்ணும், ஸ்ரீதேஜ் என்ற மகனும் மயங்கி விழுந்தனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ரேவதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது மகன் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளார்.

இந்நிலையில் அல்லு அர்ஜுன், இயக்குனர் சுகுமார், படத்தை தயாரித்த மைத்ரி மூவி மேக்கர்ஸ், தியேட்டர் உரிமையாளர் ஆகியோர் மீது வழக்கறிஞர்கள் சங்கம் சிக்கிடப்பள்ளி காவல் நிலையத்தில் நேற்று புகார் அளித்தது. இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக விஜயகுமார் என்ற வழக்கறிஞர் தேசிய மனித உரிமை ஆணையத்திலும் புகார் அளித்தார். தேசிய மனித உரிமைகள் ஆணையமும் இந்த புகாரை விசாரணைக்கு ஏற்றுக்கொண்டது.

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)