மரிக்கொழுந்து தெரியுமா?

123
By -
0

மரிக்கொழுந்தை அதன் வாசனைக்காக மட்டுமே நாம் அறிவோம். ஆனால், அது எண்ணெய் தன்மையையும் தன்னுள் அடக்கிவைத்திருக்கும் ஓர் இயற்கை மூலிகை.

தலையின் ஸ்கால்ப் முதல் பாதம் வரை, சருமத்தை மென்மையாக்கும் தன்மை மரிக்கொழுந்துக்கு உண்டு. எனவே, மரிக்கொழுந்தை எண்ணெயாகக் காய்ச்சி ஸ்கால்ப், கேசம் முதல் உடலிலும் தடவிக்கொள்ளலாம். இது உலர்வான கேசத்தை மென்மையாக்கும், ஸ்கால்ப்பை கண்டிஷன் செய்து மென்மையாக்கி முடியை நெருக்கமாக வளர வைக்கும்.

மரிக்கொழுந்து எண்ணெய்

கால் லிட்டர் தேங்காய் எண்ணெயில் 100 கிராம் குச்சிகள் நீக்கப்பட்ட ஃபிரெஷ்ஷான மரிக்கொழுந்து இலைகளைப் போட்டுக் காய்ச்சவும். கலவை தைலப் பதத்துக்கு வந்தவுடன் அதில் ஒரு டீஸ்பூன் வெட்டிவேரைச் சேர்த்து அடுப்பை அணைத்து அப்படியே மூடிவிடவும் (இதில் வெட்டிவேர் ஒரு பிரிசர்வேட்டிவ்வாகச் செயல்படும்). இந்த எண்ணெயைத் தலைக்கு மட்டுமல்லாது பாதங்கள் மற்றும் நகங்களில் தொடர்ந்து தடவிவரும்போது, அந்தப் பகுதிகளில் உள்ள சொரசொரப்புத் தன்மை மறைந்து மென்மையாகும்; நகங்கள் உடையாமல் இருக்கும். பாத வெடிப்புக்கும் இது நிவாரணம் தரும். வாரம் இருமுறை, இந்த எண்ணெயைச் சிறிது சூடாக்கி தலை மற்றும் உடல் முழுக்கத் தடவி 10 நிமிடங்கள் ஊறவைத்தும் குளிக்கலாம்.

மரிக்கொழுந்து ஃபேஸ் பேக்

முதல்நாள் இரவு ஒரு டீஸ்பூன் கடலைப்பருப்பை ஊறவைக்கவும். மறுநாள் காலையில் இதனுடன் ஒரு டீஸ்பூன் பால் மற்றும் இரண்டு டீஸ்பூன் மரிக்கொழுந்து இலைகளைச் சேர்த்து விழுதாக அரைக்கவும். இதை முகத்தில் பேக்காகப் போட்டுவந்தால் மென்மையான மாசுமருவற்ற சருமம் கிடைக்கும்.

மணம் தரும் அற்புதமான மூலிகை மரிக்கொழுந்து. ஆரோக்கியத்தை தரும் இது, பூஞ்சை காளான்களுக்கு மருந்தாகிறது. நோய் கிருமிகளை தடுக்கிறது. வலியை  போக்குகிறது, வீக்கத்தை வற்ற செய்கிறது. மன அழுத்தத்தை போக்கும் ஒன்றாக விளங்குகிறது.
மரிக்கொழுந்தை பயன்படுத்தி தலைவலி, மூட்டுவலியை போக்கும் மருந்து தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: மரிக்கொழுந்து, நல்லெண்ணெய்,  சுக்குப்பொடி.செய்முறை: ஒரு பாத்திரத்தில் நல்லெண்ணெய் விடவும். இதனுடன், அரைத்து வைத்திருக்கும் மரிக்கொழுந்து, சிறிது சுக்குப்பொடி சேர்த்து வதக்கி  இளஞ்சூடாக தலையில் பற்றாக போட்டுவர தலைவலி சரியாகும்.    

 
மரிக்கொழுந்தை பயன்படுத்தி தோலில் ஏற்படும் அரிப்பு, சிவப்பு தன்மையை போக்கும் தைலம் தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: மரிக்கொழுந்து, தேங்காய் எண்ணெய்.செய்முறை: ஒரு பாத்திரத்தில் தேங்காய் எண்ணெய் எடுக்கவும். இதனுடன், நீர்விடாமல் அரைத்த மரிக்கொழுந்து விழுது சேர்த்து  தைலப்பதத்தில் காய்ச்சவும். இதை வடிகட்டி பயன்படுத்திவர தோல்நோய்கள் குணமாகிறது.  பல்வேறு நன்மைகளை கொண்ட மரிக்கொழுந்து, புற்றுநோய்  வராமல் தடுக்கிறது. எவ்வகை வலியையும் போக்க கூடிய தன்மை உடையது. 
 
அரிப்பை தரும் நோய்களுக்கு மேல்பற்று மருந்தாகிறது. உள், வெளி மருந்தாகவும், விஷத்தை முறிக்க கூடியதாக மரிக்கொழுந்து விளங்குகிறது.



கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)