கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த தியாகதுருகம், கள்ளக்குறிச்சி, ரிஷிவந்தியம், உளுந்தூர்பேட்டை, சின்னசேலம்,l திருநாவலூர், சங்கராபுரம், ஆகிய ஒன்றியங்களில் ஊராட்சி அளவில் பணிபுரியும் தூய்மை காவலர்கள், சுகாதார ஊக்குனர்கள், துப்புரவு பணியாளர்கள், ஓ எச் டி மேல்நிலை நீர் தேக்க தொட்டி பணியாளர்கள், ஆகிய அனைத்து பணியாளர்களும் இணைந்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர், தூய்மை பாரதம் இயக்கம் அடிப்படையில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறையின் வழியில், அனைத்து ஒன்றியங்களின் கட்டுப்பாட்டில் இயங்கும் கிராம ஊராட்சிகளில் பணி புரியும் அனைத்து சுகாதார பணியாளர்களும் ஒன்றிணைந்து இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் தங்களது கோரிக்கைகளை நினைவுபடுத்தியும், தங்களது கோரிக்கை களான , ஊராட்சித் துறை மற்றும் ஊரக வளர்ச்சித் துறை அளவில் பணிபுரியும் அனைத்து சுகாதார ஊக்குனர்களுக்கும் மாதம் 5ஆம் தேதிக்குள் ஊதியம் வழங்குமாரும்,
இந்த ஊதியம் நேரடியாக தங்களது வங்கிக் கணக்கிற்கு வழங்க வேண்டும், மேலும் இந்த ஊதியம் போதாத நிலையில் மாதம் 5 ஆயிரம் ரூபாய் உயர்வு படுத்தி வழங்க வேண்டும். ஆரம்ப முதல் இன்று வரை சுகாதார ஊக்குனராக பணியாற்றும் நபரை தவிர்த்து பயிற்சியே இல்லாத அல்லது பஞ்சாயத்து தலைவர் அதிகாரம் வைத்தோ புதிய நபரை சுகாதாரஊக்குனர் பணியில் சேர்த்தலை தடுக்கவும், சுகாதார ஊக்குனர்கள் பணி மேற்கொள்ளும்போது சில பஞ்சாயத்து தலைவர்கள் தடை செய்வதை தடுக்கவும், மேலும் ரிஷிவந்தியம் ஊராட்சி ஒன்றியம் முட்டியம் ஊராட்சியில் பணியாற்றும் சுகாதார ஊக்குனர் ஜெயந்தி மற்றும் பாதிக்கப்பட்ட பணியாளர்க்கு நிலுவையில் உள்ள ஊக்கதோகை மற்றும் 16மாத சம்பளம் ஆகியவற்றை வழங்கும்படியம்,
ஓ எச் டி மேல்நிலை நீர் தேக்க தொட்டி நீர் ஏற்றம் செய்யும் பணியாளர்கள்,
தூய்மை, மற்றும் துப்புரவு பணியாளர்கள், ஆகிய அனைத்து பணியாளர்களுக்கும் மாதம் 5ஆம் தேதிக்குள் ஊதியம் வழங்க வேண்டும் எனவும், மேலும் ஊரக வளர்ச்சித் துறையில் பணி புரியும் பணியாளர்களான சுகாதார ஊக்குனர்கள், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி பணியாளர்கள், தூய்மை காவலர்கள், துப்புரவு பணியாளர்கள், ஆகியோர்களுக்கு ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகளால் பதிவு செய்து பணியாளர் அடையாள அட்டை வழங்காதவர்களுக்கு பணிக்கான அங்கீகார அடையாள அட்டையையும் வழங்க வேண்டும் என கோரிக்கைகளை மேற்கொண்டு கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு )05/06/2025) அன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மேலும் இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு ஒட்சா கூட்டமைப்பு ஓட்சா ஊராட்சி பணியாளர்கள் சங்கம் சென்னை, நிறுவனத் தலைவர் M . அமல்ராஜ் MA, துவக்கி வைத்தார், இக் கண்டன ஆர்ப்பாட்டம் ஓட்சா கூட்டமைப்பு மாநிலத் தலைவர் K.லட்சுமணன் தலைமையில் நடைபெற்றது. மேலும் ஓட்சா கூட்டமைப்பு மாநில பொதுச் செயலாளர் G.. கிரிஷா விளக்க உரையாற்றினார். இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் மாநில தலைவர்கள் ஒருங்கிணைப்பாளர்கள் , மற்றும் மாநில செயலாளர்களுமான .
ஆர்.சென்னம்மாள், l ஆர்.எஸ்.சத்யா. எஸ். சபிதா, மாதேஸ்வரி, செல்வேந்திரன், ஆகியோர்களின் முன்னிலையில் இக்கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டம் காவல்துறை அதிகாரிகளால் சமாதானம் செய்யப்பட்டு கள்ளக்குறிச்சி மாவட்டத் தலைவர் எம்.எஸ்.வசந்த் , IAS, யிடம் ஊராட்சி அளவில் பணிபுரியும் சுகாதார பணியாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றும்படியும், இதற்கு சம்பந்தப்பட்ட மாவட்ட நிர்வாகம், மற்றும் ஊராட்சித் துறை ஊரக வளர்ச்சித் துறை அதிகாரிகள் ஆகியோர்களுக்கு நினைவுபடுத்தும் படியும் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கைகளை ஒப்படைக்கப்பட்டது. மேலும் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட அனைத்து பணியாளர்களுக்கும் இக்கூட்டத்திற்கு காவல் புரிந்த காவல்துறையினர்களுக்கும், ஓட்சா கூட்டமைப்பு மாநில ஒருங்கிணைப்பாளர் கே.எஸ்.லதா.
நன்றியுரையாற்றினார்.இதன் காரணத்தால் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு போக்குவரத்து சாலையில் பரபரப்பாக காணப்பட்டது.
எஸ்.சிவலிங்கம்.
தீச்சுடர் செய்தியாளர்
ரிஷிவந்தியம் .
89 25 45 86 93.
கருத்துரையிடுக
0கருத்துகள்