தென் மாவட்டங்களில் கனமழை ? தனியார் வானிலைவுமையம்

Theechudar - தீச்சுடர்
By -

weather

காற்றழுத்த தாழ்வு பகுதி வங்கக்கடலில் உருவாகியுள்ள வலுப்பெறும் போது தமிழக கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தனியார் வானிலை ஆய்வாளர் ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார். நியூஸ் 18 தமிழ்நாடுக்கு அவர் அளித்த பேட்டியில், டெல்டா பகுதிகளிலும் மழையின் அளவு படிப்படியாக அதிகரிக்கும். காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்று அரபிக்கடலை நோக்கி நகரும் என்பதால் வார இறுதியில் தென் மாவட்டங்களிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்றார்.

மேலும் வடசென்னையை ஒட்டியுள்ள பகுதிகளில் வடகிழக்கு பருவமழை பெய்து வருவதால் அங்கு தண்ணீர் தேங்க வாய்ப்புள்ளதாகவும் ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார்.

இன்று கனமழை எங்கே?

இதனிடையே, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் வரும் 15ம் தேதி வரை கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இன்று சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட 12 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர் மாவட்டங்களிலும், திருவாரூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், புதுச்சேரி, காரைக்கால் ஆகிய மாவட்டங்களிலும் கனமழை பெய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ராணிப்பேட்டை, மதுரை, விருதுநகர், சிவகங்கை, தூத்துக்குடி மாவட்டங்களில் நாளை புதன்கிழமை கனமழை பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் நேற்று இரவு சென்னையின் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்தது. வடபழனி, கோடம்பாக்கம், கே.கே.நகர், ஈக்காட்டுதாங்கல், நிடகரை, கிண்டி, நுங்கம்பாக்கம் மற்றும் ஆவடி போன்ற புறநகர் பகுதிகளில் மழை பெய்தது.