புதிய கொரோனா வைரஸின் அறிகுறி என்ன?
கொரோனாவின் மரபணு மாறிய ஓமிக்ரான் வைரஸ் தற்போது அடுத்தகட்ட மாற்றத்தை அடைந்துள்ளது.
இவ்வகை வைரஸுக்கு LF.7 மற்றும் NB.1.8.1 என பெயரிடப்பட்டுள்ளது.
தொண்டை புண், சோர்வு, லேசான இருமல், காய்ச்சல், சளி, மூக்கில் நீர் வடிதல், தலைவலி, உடல் வலி ஆகியவை இதன் அறிகுறிகளாக கணிக்கப்பட்டுள்ளன.
இவ்வகை வைரஸ் அதிகம் பரவினாலும் உயிரிழப்பை ஏற்படுத்தும் அச்சுறுத்தல் இல்லை.
இதனால் பாதிக்கப்பட்டாலும் 3 முதல் 5 நாட்களில் உடல்நலம் சரியாகிவிடும்.
அதே நேரத்தில், இணை நோய் உள்ளவர்கள் கவனமாக இருக்க வேண்டும்.
கோவிட் போன்ற வைரஸ்கள் எப்போதும் மாறிக்கொண்டே இருக்கும்.
அதன் வீரியம் மாறுபாடுகளை சந்திக்கும் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
தற்போது பரவி வரும் கொரோனா வீரியம் குறைந்தது.
ஆனால், எளிதாக பலருக்கும் பரவும் தன்மை கொண்டது.
காய்ச்சல், உடல்வலி, சளி இருந்தாலும் 4 நாட்களில் சரியாகும்.
குறிப்பாக வயதானவர்கள், எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்கள், இதய பிரச்சனை, நுரையீரல் பிரச்சனை இருப்போர் கவனமுடன் இருப்பது நல்லது .
கருத்துரையிடுக
0கருத்துகள்