முகப்பு ஊடக தொகுப்புஊடக வெளியீடுகள் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து 471 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டுள்ளது – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த், இஆப., அவர்கள் தகவல். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து 471 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டுள்ளது – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த், இஆப., அவர்கள் தகவல்.

a2rsocial
By -
0

 கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து 471 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டுள்ளது - மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த், இஆப, அவர்கள் தகவல்.

பொதுமக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கை மனுக்களைப் பெற்று தீர்வு காணும் வகையில் பிரதி வாரம் திங்கட்கிழமை தோறும் மாவட்ட ஆட்சியரகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்றையதினம் (16.06.2025) கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் பொதுமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளிடமிருந்து பல்வேறு கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது. இதில் பொதுமக்களிடமிருந்து வருவாய்த்துறை, வேளாண்மைத் துறை, ஊரக வளர்ச்சித் துறை, நகராட்சி நிர்வாகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சார்பில் குடிநீர் வசதி, சாலை வசதி, பட்டா மாறுதல், இலவச வீட்டு மனைப்பட்டா, முதியோர் உதவித் தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக 457 மனுக்களும், மாற்றுத்திறனாளிகளிடமிருந்து 14 மனுக்களும் என மொத்தம் 471 மனுக்கள் பெறப்பட்டுள்ளது.

பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட இம்மனுக்களின் மீது விசாரணை மேற்கொண்டு உடனடித் தீர்வு காண உரிய நடவடிக்கை மேற்கொள்ள சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த், இஆப, அவர்கள் தெரிவித்தார்.

இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி.ரா.ஜீவா, தனித்துணை ஆட்சியர் (ச.பா.தி) திருமதி.சுமதி உள்ளிட்ட அனைத்துத் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

إرسال تعليق

0تعليقات

إرسال تعليق (0)