.போதை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி
திருவேற்காடு எஸ் கே டி ஜெ மேல் நிலைப் பள்ளியில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.இதில் ஆசிரியர் சத்தியமூர்த்தி வரவேற்புரை ஆற்றினார். திருமதி மாணிக்கவல்லி தலைமை ஆசிரியர் மற்றும் திரு லையன் இ.டில்லி டெபுடி செக்ரட்டரி முன்னிலை வகித்தனர்.மேலும் டி 5 காவல் நிலைய ஆய்வாளர் டி ராஜாகுமார் சிறப்புவுரை ஆற்றினார்.மாணவ ,மாணவிகள் அனைவரும் உறுதிமொழி ஏற்றனர்.
கட்டுரை போட்டி, கவிதை போட்டி,ஸ்லோகன் போட்டி நடத்தப்பட்டது.விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி மாணவர்கள் கோஷமிட்டனர் மற்றும் பேரணி நடைபெற்றது.
பள்ளி செயலர் திருமிகு ஜெ சத்ய நாராயணன் பி.இ அவர்கள் அனைவருக்கும் வாழ்த்து தெரிவித்தார்.பெற்றோர்கள் சமூக ஆர்வலர்கள் மற்றும் பொது மக்கள் வாழ்த்து தெரிவித்தனர் .