எஸ்.கே.டி.ஜே மேல்நிலைப்பள்ளி நிர்வாக அலுவலராக டாக்டர் நா. பூபாலமுருகன் நியமனம் .
திருவேற்காடு எஸ்.கே.டி.ஜே மேல்நிலைப் பள்ளியில் மேனாள் திருவள்ளூர் மாவட்டம் முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் மற்றும் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் டாக்டர் நா.பூபாலமுருகன் நிர்வாக அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஆறு முதல் 12 ஆம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவியர்களுக்கான வகுப்பு மாணவர் தலைவர் & துணைத்தலைவர் (ஆண்),வகுப்பு மாணவர் தலைவி, & துணைமாணவர் தலைவி (பெண்) மற்றும் பள்ளி மாணவர் தலைவருக்கான அடையாள வில்லை நிர்வாக அறங்காவலர் மற்றும் பள்ளிச் செயலாளர் திருமிகு ஜெ.சத்ய நாராயணன் பி.இ அவர்களால் வழங்கப்பட்டது. மேலும் மாணவச் செல்வங்களுடன் டெபுடி செகரட்டரி திருமிகு லயன் இ.டெல்லி, பள்ளித் தலைமை ஆசிரியை திருமதி அ.மாணிக்கவல்லி மற்றும் மேனாள் பள்ளி ஆசிரியர் திரு ராம் சிங் அவர்களும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
செய்தியாளர்
பா. கணேசன்