கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் வீரட்டேஸ்வரர் ஆலயத்தில் 08/06/2025 நேற்று முகூர்த்த நாள் என்பதால் நிறைய திருமணங்கள் நடந்தேறின. அக்கூட்டங்களை பயன் படுத்தி ஒரு பெண் அங்கே கூடியிருந்த பெண்களின் தோளில் தொங்கிய பைகளில் கையை விட்டு துழாவிக்கொண்டிருந்தார்.
மணமகனின் தாயின் பையில் கைவிட்டதை பார்த்த பெண்கள் ஏன் உள்ளே கைவிட்டாய் என கேட்டதற்கு ஜிப்பை மூடினேன் என கூறிக்கொண்டே அவ்விடத்தை விட்டு நகர்ந்தார்.
மீண்டும் மீண்டும் அடுத்தடுத்த கூட்டங்களில் நுழைந்து அதே கைவரிசையை காட்டினார்.
அவரை நாம் பின் தொடர்வதை பார்த்த அந்த பெண் இன்னிக்கு ஒன்னும் தேறாது என முனகிக்கொண்டே அவ்விடத்தை விட்டு நகர்ந்தார்.
அவர் ஏதேனும் திருடி இருந்தால் அவரை பிடித்து காவல் துறையினர் இடம் ஒப்படைக்க நினைத்து ஆனாலும் அப்பெண் சிக்கவில்லல.
எனவே,
மக்கள் கூட்டமாக சேரும் இடங்களுக்கு செல்லும் போது உங்களது உடமைகளை பத்திரமாக பார்த்துக்கொள்ளுங்கள்.
கருத்துரையிடுக
0கருத்துகள்