கல்லை மாவட்ட முத்தமிழ் சங்கம் சார்பில் பாராட்டு விழா

Unknown
By -

கல்லை மாவட்ட முத்தமிழ்ச் சங்கம் சார்பாக உலக போதைப்பொருள் ஒழிப்பு தினம், உலக பொது சேவை தினம், கண்ணதாசன் பிறந்தநாள் விழா, பள்ளி மாணவர்கள் எழுதிய எண்ணங்களும் வண்ணங்களும் நூல் வெளியீட்டு விழா என நாற்பெரும் விழா சங்கராபுரம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது.

முத்தமிழ்ச் சங்க காப்பாளர் கோமுகி மணியன் தலைமை தாங்கினார். முத்தமிழ்ச் சங்கத் தலைவர் முருககுமார் வரவேற்புரை ஆற்றினார் . பள்ளி உதவி தலைமையாசிரியை ராஜலஷ்மி , முத்தமிச்சங்க பொருளாளர் அம்பேத்கர் அவை முன்னவர் அண்ணாமலை , வணிகர் சங்க செயலாளர் குசேலன், துணைத் தலைவர் தாமோதரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர் .  உலக பொது சேவை தினத்தைப் பற்றி சங்கராபுரம் அனைத்து பொது சேவை அமைப்புகளின் ஒருங்கிணைப்பாளர் முத்துக்கருப்பன் சிறப்புரையாற்றினார் . உலக போதைப்பொருள் ஒழிப்பு தினத்தைப் பற்றி முத்தமிழ் சங்க இணைச் செயலாளர் ராஜா சிறப்புரையாற்றினார் .  கவியரசர் கண்ணதாசன் தினத்தைப் பற்றி முத்தமிழ்ச்சங்க துணைத் தலைவர் கலைமகள் காயத்ரி சிறப்புரையாற்றினார் .  பள்ளி மாணவர்கள் எழுதிய எண்ணங்களும் வண்ணங்களும் நூலை தொகுப்பாசிரியர் தாமோதரன் முன்னிலையில் கோமுகி மணியன் வெளியிட முத்துக்கருப்பன் மற்றும் நிர்வாகிகள் பெற்றுக் கொண்டனர் .  இதில் மாணவிகளுக்கு பேச்சரங்கம் நடத்தி பரிசு வழங்கப்பட்டது , மற்றும் 10 மற்றும்11ஆம் வகுப்பில் முதல் மூன்று இடங்கள் பிடித்த மாணவர்களுக்கு மாவட்ட முத்தமிழ் சங்கம் சார்பாக பரிசு வழங்கி சிறப்பிக்கப்பட்டது . நிகழ்வில் தமிழ்ப் படைப்பாளர் சங்கச் செயலாளர் சக்திவேல் பள்ளி மேலாண்மை குழு தலைவர் லஷ்மி, தமிழ்ச் செம்மல் சண்முக பிச்சை பிள்ளை , ஆசிரியர் ரமேஷ் உட்பட மற்றும் பலர் கலந்து கொண்டனர்.