கள்ளக்குறிச்சி வேளாண்மை அறிவியல் நிலையம் பொன்விழா சுடர் ஓட்ட நிகழ்வுகள்

Theechudar - தீச்சுடர்
By -

கள்ளக்குறிச்சி
பொன்விழா சுடர் ஓட்ட நிகழ்வுகள் கள்ளக்குறிச்சி மாவட்டம்( விழுப்புரம் – II ) காளசமுத்திரத்தில் அமைந்துள்ள வேளாண்மை அறிவியல் நிலையத்தில் 12.11.2024 அன்று வேளாண்மை அறிவியல் நிலையங்களின் பொன்விழா ஆண்டை முன்னிட்டு பொன்விழா சுடர் ஓட்ட நிகழ்வு நடை பெற்றது .

மேலும் அதனையொட்டி வேளாண்மை அறிவியல் நிலையம் மற்றும் ஆகாஷ்வாணி புதுச்சேரி வானொலி நிலையமும் இணைந்து நடத்திய ‘அங்கக முறையில் பயிர் சாகுபடி மற்றும் கால்நடை உற்பத்தி’ என்ற தலைப்பில் ஒலிபரப்பு செய்யப்பட்டது பண்ணை வானொலி பள்ளியின் ஒரு நாள் நேர்முகப் பயிற்சியும் நடைபெற்றது .

இதையும் படியுங்கள் : தென் மாவட்டங்களில் கனமழை ? தனியார் வானிலைவுமையம்

இந்நிகழ்ச்சியில் வேளாண்மை அறிவியல் நிலையம் பேராசிரியர்  மற்றும் தலைவர் முனைவர் மா. விமலாராணி வரவேர்ப்புரை வழங்கிபொன்விழா ஆண்டு சுடர் குறித்து விளக்கினார். கள்ளக்குறிச்சிமாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் திரு. பொ. அசொ க்குமார், தோட்டக்கலை துணை இயக்குநர் திரு. வே சிவக்குமார் மற்றும் கால்நடை பராமரிப்பு துறை உதவி இயக்குநர் மருத்துவர். மு. கந்தசாமி வாழ்த்துரை வழங்கினார்கள்.

புதுச்சேரி ஆகாஷ்வாணி வானொலி நிலைய உதவி இயக்குநர் திரு. த. செந்தில்குமார் அவர்கள் பண்ணை வானொலி ப் பள்ளி குறித்து சிறப்புரை நல்கினார்.

சேலம் கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் முதல்வர் முனைவர் அ. இளங்கோ அவர்கள் பண்ணை வானொலி ப் பள்ளி பங்கேற்பாளர்களுக்கு சான்றிதழ் மற்றும் அங்கக வேளாண்மை குறித்த புத்தகம் வழங்கி தலைமை யுரை யாற்றினார்.

 

மேலும் இந்நிகழ்வின் ஒரு பகுதியாக பயிர் சாகுபடி மற்றும் கால்நடை வளர்ப்பு குறித்த கண்காட்சி நடத்தப்பட்டு கலந்து கொண்ட விவசாயிகளுக்கு வேளாண்மை அறிவியல் நிலையத்தில் அமைந்துள்ள மாதிரி பண்ணைகளை பார்வையிட்டு விளக்கம் அளிக்கப்பட்டது.

இதையும் படியுங்கள் : IDBI வங்கி ESO வேலை ┃IDBI BANK LTD RECRUITMENT 2024 

(முன்னோடி விவசாயிகள் வேளாண்மை அறிவியல் நிலையத்துடன் இணைந்து பயணித்த வெற்றி அனுபவத்தை மற்ற விவசாயிகளிடம் பகிர்ந்து கொண்டனர்) மேலும் வேளாண்மை அறிவியல் நிலைய பயனாளி விவசாயிகளின் வெற்றிக்கதைகள் புதுச்சேரி வானொலி நிலையம் மூலம் பதிவு செய்யப்பட்டது. இந்நிகழ்ச்சியில் 148 விவசாயிகள் கலந்து கொண்டு பயனடைந்தனர் . இறுதியாக வேளாண்மை அறிவியல் நிலைய தோட்டக்கலை பேராசிரியர் முனைவர் சி.ஷர்மிளாபாரதி நன்றியுரை வழங்கினார்.

   வேளாண்மை நிலைய pdf   Download

                                                                        செய்திகளுக்காக : சகோ சங்கர்

                                                                      cell :+91 84894 95747