Tamilnadu Weather Update: தமிழகத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், மழையின் தாக்கம் குறித்தும், வரும் நாட்களில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் வாய்ப்புகள் குறித்தும் தெற்கு வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் விளக்கம் அளித்துள்ளார்.
வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதால் தமிழகத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வரும் நிலையில், வரும் நாட்களில் மழையின் தாக்கம் என்ன என்றும், புதிய மழை உருவாக வாய்ப்பு உள்ளதா என்றும் தெற்கு வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் விளக்கமளித்துள்ளார்.
Heavy Rain
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: தற்போது உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி 12 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழக்கும். இதையடுத்து அந்தமான் கடலில் டிசம்பர் 15ம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளது.அதன் இயக்கத்தை பொருத்து தமிழகத்தில் மழை பெய்யுமா என்பதை கணிக்க முடியும்.
Chennai Rain Update
இன்று தென் தமிழகத்தில் நெல்லை, தூத்துக்குடி, தென்காசி ஆகிய 3 மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, சென்னை, செங்கல்பட்டு, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், திருச்சி, கரூர், திண்டுக்கல், திருப்பூர், கோவை உள்ளிட்ட 17 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

வடகிழக்கு பருவமழையை பொறுத்தவரை அக்டோபர் 1ம் தேதி முதல் இன்று வரை 47 செ.மீ. வடகிழக்கு பருவமழை இயல்பை விட 16% அதிகமாக பெய்துள்ளது. மழை பெய்யும்போது பனிப்பொழிவு இருக்காது. காற்றழுத்த தாழ்வு பகுதியின் தன்மை காரணமாக ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. பலவீனமான அமைப்பு என்பதால் அதில் பல வேறுபாடுகள் இருக்கும். இதனால் மழையில் ஏற்ற இறக்கம் ஏற்பட்டுள்ளது. வங்கக் கடலில் தற்போது நிலவி வரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவிழக்கும். இதனால் மழையும் குறையும். காற்றில் அதிக ஈரப்பதம் இருப்பதால் பனிமூட்டம் போல் காட்சியளிக்கிறது.
வானிலை பல காரணிகளைக் கொண்டிருப்பதால் துல்லியமாக கணிக்க முடியாது. இன்றைய சூழலில் புயல், கனமழை போன்றவற்றை கணிப்பதில் முழுமையான அறிவியல் இல்லை.செயற்கைக்கோள்கள் மற்றும் கணினி மாதிரிகள் மூலம் வானிலையை கணிக்கிறோம். வானிலை முன்னறிவிப்புகள் புயல்களில் உளவு விமானங்களை அனுப்புவதன் மூலமும் தரவுகளை சேகரிக்கின்றன. ஆனால் அதுவும் சில நேரங்களில் தவறாகிவிடும். தொழில்நுட்பத்தை மட்டும் பயன்படுத்தி துல்லியமான வானிலை முன்னறிவிப்புகளை உருவாக்க முடியாது. தொழில்நுட்பத்துடன் அறிவியலும் முன்னேற வேண்டும் என்றார் பாலச்சந்திரன்.
إرسال تعليق
0تعليقات