கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அடுத்து தேவபாண்டலத்தில்
கார்குழலி தமிழ்ச்சங்கத்தின் சார்பில் பாவேந்தர் பாரதிதாசன் பிறந்தநாள் , மே தினம் விழா, பத்திரிகையாளர்களுக்கு பாராட்டு விழா , தமிழ்ச் செம்மல் விருது பெற்ற சண்முகபிச்சைபிள்ளை அவருக்கு பாராட்டு விழா ஆகியவை நடைபெற்றது , இதில் அரிமா மாவட்டத் தலைவர் க.வேலு தலைமை தாங்கினார் . இந்நிகழ்வில் திருக்குறள் பேரவை நிர்வாகி ஆ.இலட்சுமிபதி
ஜெய் பிரதர்ஸ்
நற்பணி மன்றதலைவர் கபடி வ.விஜயகுமார் , பொறியாளர் செல்வமணி , ஒன்றிய கவுன்சிலர்
அம்பிகா வீரமணி கற்க கசடற கல்வி களத்தில் நிறுவன தலைவர்
தேவ.திருவருள் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தமிழ் படைப்பாளர் சங்க துணைச் செயலாளர் கோ.சக்திவேல்
வரவேற்றார்.
தொழிலதிபர் ஆறு.கதிரவன் மாணவர்களுக்கு பரிசு வழங்கி வாழ்த்தி பேசினார். சிறந்த பத்திரிகையாளர்களுக்கு நூலாடை அணிவித்து , நினைவு பரிசுகள் வழங்கி பாராட்டு செய்யப்பட்டது. நிறைவாக கார் குழலி தமிழ் சங்க தலைவர் இராசு .தாமோதரன் நன்றியுரை ஆற்றினார்
கருத்துரையிடுக
0கருத்துகள்