மெளனமான மாரடைப்பு வந்தால்.....

123
By -
0

ஸ்டென்ட் சிகிச்சை...


1. ஸ்டென்ட் சிகிச்சை
2. ஸ்டென்ட் என்றால் என்ன?
3. மாரடைப்பு என்றால் என்ன?
4. மெளனமான மாரடைப்பு
5. வேறுபாடு என்ன?

ஸ்டென்ட் சிகிச்சை

யாருக்காவது மாரடைப்பு வந்து விட்டால் நோயாளியை பரிசோதிக்கும் டாக்டர் ஆஞ்சியோ பண்ணிடலாம், ஸ்டென்ட் வைத்து விட்டால் போதும் என்பார். ஸ்டென்ட் சிகிச்சை உண்மையில் வரப்பிரசாதம் என்று தான் கூற வேண்டும். மூளைக்கு செல்லும் ரத்த ஓட்டம் பாதிக்கப்பட்டு பக்கவாதம் ஏற்படுவதை தடுக்க ஸ்டென்ட் சிகிச்சை கைகொடுக்கிறது
நோயாளிகளுக்கு நல்ல பலன் கிடைக்கிறது. அதன் பின் தேவைப்பட்டால் பைபாஸ் அறுவை சிகிச்சை செய்கின்றனர். பெரும்பாலானோருக்கு ஸ்டேன்ட் பொருத்திய பின் மருந்து மாத்திரையில் சீராக்கி விட முடிகிறது.

ஸ்டென்ட் என்றால் என்ன?

ஸ்டென்ட் என்பது மிகச்சிறிய வலைகுழாய், உடலில் எந்த பாகத்தில் ரத்தக்குழாய் அடைப்பு ஏற்பட்டாலும், ரத்த ஓட்டத்தை சீராக்க இந்த டியூப் ரத்த குழாயில் செருகப்படுகிறது. இதற்காக தான் ஆஞ்சியோபிளாஸ்டி என்ற சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது.

ஆஞ்சியோவின் முக்கிய கட்டம்தான் ஸ்டென்ட் வைப்பது. ரத்தக்குழாயின் ரத்தம் ஓட்டம் பாதிக்கப்படுவதை தடுப்பதற்கு மட்டுமின்றி ரத்தக்குழாய் பலவீனமாக இருந்து அது வெடிப்பதை தடுக்கவும் ஸ்டென்ட் தயாரிக்கப்டுகிறது. சிலவகை ஸ்டென்ட்கள் மருந்து தடவியதாகவும் இருக்கும்.

இதயத்துக்கு பாதுகாப்பு அவசியம். இதயத்தில் உள்ள ரத்தக்குழாய்கள் சீராக இருப்பது முக்கியம். அதில் ரத்தம் செலுத்தப்பட்டு, பின்னரே மற்ற உறுப்புகளுக்கு செல்கிறது. இதய ரத்தக்குழாய்களில் கொழுப்பு சேர்ந்து அடைப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது.

 இதனால் ரத்த ஓட்டம் பாதிக்கப்படும் போது நெஞ்சுவலி, அதைத்தொடர்ந்து மாரடைப்பு ஏற்படுகிறது.
ஸ்மென்ட் பொருத்தப்பட்டவுடன் ரத்த நாளத்தில் அடைப்பு நீக்கப்படுகிறது. வலைடியூப் வழியாக ரத்தம் சீராக பாய்கிறது. ஸ்டென்ட் பொருத்தாவிட்டால் மீண்டும் ரத்தக்குழாய் அடைப்பு ஏற்பட்டு மாரடைப்பு ஏற்பட வாய்ப்பு அதிகம்.

பக்கவாதத்தையும் தடுக்கும் வலது இடது கழுத்தில் கரோடைட் என்ற ரத்தக்குழாய்கள் உள்ளன. இதயத்தில் இருந்து செலுத்தப்படும் ரத்தம் இந்த ரத்தநாளங்கள் வழியாகத்தான் மூளைக்கு செல்கின்றன. இதிலும் அடைப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது.

இதைத்தடுக்கவும் ஆஞ்சியோ பிளாஸ்டி சிகிச்சை பயன்படுகிறது. ஸ்டென்ட் வைத்தவுடன் மூளைக்கு ரத்த ஓட்டம் சீராகி பக்கவாதம் தவிர்க்கப்படுகிறது. இதய ரத்தக்குழாய்களில் பலன் தரும் ஸ்டென்ட் பக்கவாதம் ஏற்படுவதை தடுக்கிறது என்பதை அமெரிக்க, ஐரோப்பிய நிபுணர்கள் சமீபத்தில் உறுதி செய்துள்ளனர்.

மாரடைப்பு என்றால் என்ன?

இதயத்திற்கு ரத்தத்தைக் கொடுக்கும் ரத்தக் குழாய் முழு அடைப்பு ஏற்பட்டால் மார்பு வலி வரும். 

சிலருக்கு மரணத்தை கொடுக்கும். அஞ்சைனா என்ற மார்புவலி, ரத்தக்குழாயில் 70 சதவீதம் முதல் 90 சதவீதம் வரை அடைப்பு ஏற்பட்டால் வரும். இந்த அடைப்புகளால் இதய தசைகள் செயல் குறைந்து, நலிவடைகிறது.
இ.எப்., என்ற இதய தசைகள் இயக்கத்தின் செயலை குறிக்கும் குறியீடு. இது 60 சதவீதம் முதல் 70 சதவீதம் வரை இருக்க வேண்டும். இதுதான் முதலில் ஏற்படுகிறது.

அதன்பின் தான் மார்புவலி. கரோனரி ரத்தக்குழாயின் முழு அடைப்புதான் மாரடைப்புக்குக் காரணம். முன் கூட்டியே, 70 முதல் 90 சதவீதம் அடைப்புள்ள குழாயில், மீதியுள்ள குழாயில் ரத்தம் உறைந்து முழு அடைப்பாகிறது.
இந்த நேரத்தில், மார்புக் கூடு முன் கடுமையான வலி, இந்த வலி இடது தோல் பட்டைக்கு பரவுதல், முதுகுக்குப்பின் வலி வருதல், சில சமயங்களில் பல் வலி, பகட்டு வலி, கழுத்து வலி, விழுங்க கஷ்டம், காஸ் அடைப்பு போன்று பல அறிகுறிகள் தென்படலாம்.

மெளனமான மாரடைப்பு

இந்த அறிகுறிகள் இல்லாமல், பரிசோதனைக்கு வரும்போது மாரடைப்பு கண்டு பிடிக்கப்படுகிறது. இது மெளனமான மாரடைப்பு. இதை இ.சி.ஜி., மூலம் தெரிந்து கொள்ளலாம். இந்த மாரடைப்பை ஊர்ஜிதம் செய்ய, என்சைம் பரிசோதனை செய்யலாம்.

 தற்போது டிராப்ட் டெஸ்ட் என்ற பரிசோதனை இதய தசைகள் பழுதடைந்ததை காட்டும். அதன்பின், எக்கோ கார்டியோ கிராம் பரிசோதனை.
மார்புவலி, மாரடைப்பு என்று அறிந்த பிறகு, தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்க வேண்டும். இல்லையென்றால், அன்ஸ்டேபில் ஆஞ்ஜினாவால் (UNSTABLE ANGINA) ஒருநாள் கண்காணித்து, அடுத்த நாள் அனுப்பலாம்.

 இல்லையென்றால், தேவையில்லாமல் ஐ.சி.யு., அட்மிஷன் என்று பல ஆயிரம் செலவழிக்க வேண்டி வரும். அடைப்புக்கு காரணமான ஆஞ்ஜியோகிராம் செலவு, ஐ.சி.யு., செலவைவிடக் குறைவு தான்.

வேறுபாடு என்ன?

ஆஞ்ஜியோகிராம் பரிசோதனைக்கும், டி.எம்.டி., எக்கோ கார்டியோகிராம் பரிசோதனைகளுக்கும் உள்ள வேறுபாடுகள் டி.எம்.டி., என்ற பயிற்சி இ.சி.ஜி., இதில் ரத்தக்குழாய் அடைப்பு, இதயம் மூச்சிரைப்பு, படபடப்பு, மார்புவலி ஆகியவற்றை கண்டறியலாம்.
எக்கோ கார்டியோகிராம் இதய நான்கு அறைகள், நான்கு வால்வுகள், ரத்த ஓட்டம், இதய தசைகளின் செயல்பாடு இவைகளை குறிக்கும். கொலஸ்டிரால் என்ற லிப்ட் புரபைல், இதில் நல்ல கொழுப்பு (HDL), கெட்டக் கொழுப்புகளால் LDL, VLDL, டிரை இளரைடு இவை கண்டு பிடித்து அடைப்பின் அனுமானத்தோடு கூறலாம்.
கரோனரி ஆஞ்ஜியோகிராம் என்ற ஊடுருவல் பரிசோதனை, துல்லியமாக ரத்தக்குழாய் அடைப்பை காட்டும். இதற்கு, மருந்தை உட்செலுத்தி படமெடுத்து காட்டலாம். இதில் ரத்த ஓட்டத்தை மூன்று ரத்தக்குழாயில் கண்டுகொள்ளலாம். 

இதில் இதய துடிப்பையும், ரத்த ஓட்டமும் டைனமிக் என்ற செயல்பாட்டில் பார்க்கலாம்.
மற்ற 64, 120, சி.டி., ஆஞ்ஜியோகிராமில் கரோனரி வரைபடம் பார்க்கலாம். ஆனால், ரத்த ஓட்டம், சிஸ்டலி, டியஸ்டலி போன்றவற்றுக்கு படத்தைப் பார்க்க முடியாது. இதுதான் சிறந்தது. பை-பாஸ் சர்ஜரி, ஆஞ்சியோ பிளாஸ்டி, ஸ்டென்ட் சிகிச்சைக்கு இதுதான் முக்கிய டெஸ்ட்.

யார் யாருக்கு எப்போது தீவிர சிகிச்சை (ICC) தேவை?

1) மாரடைப்பு, இ.சி.ஜி.,யில் மாற்றம், டிராப்ட் டெஸ்ட் பாசிடிவ் ஐ.சி.யு., தேவை.

2) மூச்சுத் திணறல், இதயபம்பிங் குறைவினால் நுரையீரலில் தண்ணீர் சேர்தல்.

3) படபடப்பு, மயக்கம், தலைசுற்றல், இ.சி.ஜி.,யில் மாற்றம்.

4) மயக்கம், மூச்சு பேச்சு இல்லாத நிலை.

5) ரத்த அழுத்தம் குறைதல், இதயத்துடிப்பு குறைதல்.

மேற்கூறியவைகள் தான் முக்கிய ஐ.சி.யு., அனுமதிக்கு காரணமாகிறது. இந்நிலையில், நல்ல முன்னேற்றம் வந்த பிறகு ஆஞ்ஜியோகிராம் செய்ய வேண்டும். சில நேரங்களில், மேற்கூறிய நிலையில் முன்னேற்றம் இல்லையென்றால், உயிரைக் காப்பாற்ற ரெய்டு (Rescue Angyogram plasty)  ஆஞ்சியோகிராம் செய்ய வேண்டும்.

 முன்கூட்டியே அடைப்பை அறிய, யார் யாருக்கு கரோனரி ஆஞ்ஜியோகிராம் செய்ய வேண்டும்.

அ) ரத்தக்கொதிப்பு, சர்க்கரை வியாதி, அதிக கொதிப்பு உள்ளவர்கள், பாரம்பரிய தன்மை, புகைப்பிடிப்பவர், அதிக எடைஉள்ளவர்கள்.

ஆ) நெஞ்சு எரிச்சலுள்ளவர்கள், சிறிது தூரம் நடந்தால் மூச்சிரைப்பு, படபடப்புள்ளவர், நாளாக நாளாக இனம் புரியா தளர்ச்சி.

இ) ரிஸ்க் உள்ள பணியாளர்கள் நடுத்தர வயதினர். வருடத்திற்கு ஒருமுறை குடும்பத் தலைவர் தனது குடும்பத்தினருக்காகவாவது இந்த மாரடைப்பு வர காரணமான அடைப்பை கண்டறிய வேண்டும்.

إرسال تعليق

0تعليقات

إرسال تعليق (0)