ஸ்ரீ சக்தி பெரிய நாயகி அம்மனுக்கு நூரோலை மற்றும் சேரந்தாங்கல், பொது மக்களால் முப்பூசை திருவிழா...

Theechudar - தீச்சுடர்
By -
0
நூரோலை கிராமக் குலக்கரையில் அமைந்துள்ள குல தெய்வமான,மிகவும் சக்தி கொண்ட  ஸ்ரீ சக்தி பெரிய நாயகி அம்மனுக்கு நூரோலை மற்றும் சேரந்தாங்கல், பொது மக்களால் முப்பூசை திருவிழா...


கள்ளக்குறிச்சி மாவட்டம் வாணாபுரம் தாலுக்காவை சார்ந்த   நூரோலை கிராமக் குலக்கரையில் அமைந்துள்ள பழமை கொண்ட ஸ்ரீ சக்தி பெரிய நாயகி அம்மன் ஆலயம் அமைந்துள்ளது.

 இந்த ஆலயம் சுற்றி வேறு எந்த கோவிலும் இல்லை என்பதும் குறிப்பானது. தனிமையில் அமைந்துள்ள இந்த ஆலயம் சென்று அம்மனிடம் வேண்டுதல் செய்தால் நினைத்தது நிறைவேறும் என்பது அப்பகுதியில் உள்ள மக்கள் கூறி வருகின்றனர்.

 மேலும் இந்தமகா சக்தி கொண்ட அம்மனிடம் எந்த நாட்களிலும் வழிபாடு செய்து தங்களால் முடிந்த பூசைகள் செய்து அம்மனிடம் வேண்டும்போது அங்குள்ள மரங்களில் பள்ளியின் சத்தம் கேட்டால் நினைப்பது நடக்கும்  என்பதும் ஐதீகம் என நம்பப்படுகிறது. 

மேலும் இத்தனை சக்தி கொண்ட அம்மன் நூறாண்டுகளுக்கு மேல் நூரோலை மற்றும் சேரந்தாங்கல், கிராமப் பொது மக்களால் குலதெய்வம் என கொண்டாடி வருவதை தொடர்ந்து இந்த ஆண்டும் தமிழ் வைகாசி மாதம் 14 ல். 28/05/2025 அன்று நூரோலை மற்றும் சேரந்தாங்கல் கிராமப் பொது மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து அம்மனுக்கு ஆடை அலங்காரம் செய்து  பொங்கல் வைத்து, அருள் வாக்கு கேட்டு கொண்டாடினர். மேலும் இவ் விழாவை அம்மனிடம் அருள் பெற  ஆடு, பன்றி மற்றும் சேவல் போன்றவைகள் பலி கொடுக்கப்பட்டு தங்களது வேண்டுதலையும் நிறைவேற்றி மகிழ்ச்சியுற்றனர். 

இந்த திருவிழா வழக்கம்போல் அனைவரும் ஒன்றிணைந்து சுமார் ஐந்தாயிறத்துக்கும் மேர்ப்பட்ட மக்கள் பொங்கலிட்டு வெகு சிறப்பாக இவ்விழாவைக் கொண்டாடினர்.


S. சிவலிங்கம்.
தீச்சடர் செய்தியாளர்.
ரிஷிவந்தியம்.

إرسال تعليق

0تعليقات

إرسال تعليق (0)