கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 18 வயது பூர்த்தி அடைந்த அனைத்துக் குடிமக்களையும் வாக்காளர் பட்டியலில் சேர்த்திட சிறப்பு முகாம் மற்றும் SVEEP விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளது - மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி.ரா.ஜீவா அவர்கள் தகவல்.
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில் கள்ளக்குறிச்சி மாவட்டத்திலுள்ள 4 சட்டமன்ற தொகுதிகளுக்கும் புதியதாக நியமனம் செய்யப்பட்டுள்ள வாக்காளர் பதிவு அலுவலர்கள் மற்றும் உதவி வாக்காளர் பதிவு அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த், இஆப, அவர்கள் அறிவுறுத்தலின்படி, மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி.ரா.ஜீவா அவர்கள் தலைமையில் இன்று (16.06.2025) பயிற்சி வகுப்பு நடைபெற்றது.
பின்னர் இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் அவர்கள் தெரிவித்ததாவது:
இந்திய தேர்தல் ஆணையம் மற்றும் தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அலுவலர் அவர்களின் அறிவுரையின்படி, கள்ளக்குறிச்சி மாவட்டத்திலுள்ள 4 சட்டமன்ற தொகுதிகளுக்கும் புதியதாக நியமனம் செய்யப்பட்டுள்ள வாக்காளர் பதிவு அலுவலர்கள் மற்றும் உதவி வாக்காளர் பதிவு அலுவலர்களுக்கு இன்றையதினம் பயிற்சி வகுப்பு நடைபெற்றது.
வாக்காளர் பட்டியல் தயாரிப்பு மற்றும் செம்மைப்படுத்துதல் தொடர்பாக இந்திய தேர்தல் ஆணையத்தால் வெளியிடப்பட்ட திருத்தப்பட்ட வழிமுறைகளின்படி கள்ளக்குறிச்சி மாவட்டத்திலுள்ள 4 சட்டமன்ற தொகுதிகளுக்குட்பட்ட வாக்குச்சாவடிகளில் 1,200 வாக்காளர்களுக்கு மேல் உள்ள வாக்குச்சாவடிகளைப் பிரிப்பது அல்லது மறுசீரமைப்பது, 18 வயது பூர்த்தி அடைந்த அனைத்துக் குடிமக்களையும் வாக்காளர் பட்டியலில் சேர்த்திட சிறப்பு முகாம் மற்றும் SVEEP விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்திடும் பயிற்சி வழங்கப்பட்டது.
கருத்துரையிடுக
0கருத்துகள்