மருந்துகள் இல்லாததால் கால்நடை வளர்ப்போர் பெரும் அவதி....

123
By -
0


நெல்லிக்குப்பம் நகராட்சிக்கு உட்பட்ட கால்நடை மருத்துவமனையுடன் கூடிய மருந்தகத்தில் மருந்துகள் இல்லாததால் கால்நடை வளர்ப்போர் பெரும் அவதி....

நெல்லிக்குப்பம் நகராட்சிக்கு உட்பட்ட சரவணபுரம் சாலையில் மருந்தகத்துடன் கூடிய கால்நடை மருத்துவமனை உள்ளது.இங்கு நெல்லிக்குப்பம் நகராட்சியை சுற்றியுள்ள 30வார்டுகளிலும் உள்ள மக்கள் தங்கள் வீட்டில் வளர்க்கப்படும் ஆடு,மாடு, மற்றும் செல்ல பிராணிகளான பூனை,நாய் உள்ளிட்ட பல்வேறு கால்நடைகளுக்கு மருத்துவம் செய்து வருகின்றனர். ஆனால் மருத்துவ மனையில் போதிய மருந்துகள் இல்லாததால் கடலூர் வரை சென்று தனியார் மருத்துவமனைகளில் மருந்துகள் வாங்கி வந்து மருத்துவம் பார்க்கப்படுகிறது. மேலும் கால்நடைகளின் மருத்துவம் குறித்தும் நோய் குறித்தும் சரியான தகவல்களை மருத்துவர்கள் தர மறுக்கிறார்கள். தனியார் மருத்துவமனைக்கும் , தனியார் மருந்தகங்களுக்கும் பணிபுரியும் மருத்துவர் பரிந்துரை செய்கின்றனர். மேலும்  கால்நடைகளுக்கு குடிநீர் இணைப்பு இருந்தும் செயல்படாததால் குடிநீரின்றி தவிக்கும் கால்நடைகள்.ஆகவே, மாவட்ட நிர்வாகம் கால்நடைகள் மீது தனி கவனம் செலுத்தி நிரந்தர தீர்வு காண வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

إرسال تعليق

0تعليقات

إرسال تعليق (0)