தமிழ்நாடு அரசின் இ-சேவைகள் மூலம் பட்டா, ஏ-பதிவேடு சாராம்சங்களை பார்க்கவும், சரிபார்க்கவும் முடியும் என்றாலும், நடைமுறையில் பட்டா வழங்கும் பணி மெதுவாக நடந்து வருவது விவசாயிகள் பலரின் குறையாக உள்ளது.
வன உரிமை சட்டம் “வன உரிமை சட்டமானது, பல நூற்றாண்டுகளாக வனப்பகுதிகளில் வாழும் பழங்குடி மக்களுக்கும் மற்றும் பாரம்பரிய வன வாசிகளுக்கும் நில உரிமையை அங்கீகரிக்கும் சட்டம். ஆனால், இதனைச் சரியாக அமல்படுத்தாதது, பல மாநிலங்களிலும் பொதுவான ஒரு பிரச்சனையாக உள்ளது.
தென்பெண்ணை ஆறு மாசுபாடு “தென்பெண்ணை ஆறு கர்நாடக மாநிலத்தில் 112 கி.மீ. தூரமும், தமிழ்நாட்டில் பல மாவட்டங்களில் பாய்ந்து இறுதியில் கடலூர் அருகே வங்காள விரிகுடாவில் கலக்கிறது. இதில், கர்நாடகம் கழிவுநீரை கலப்பது நீண்ட காலமாக உள்ளது.
இதில், ஒன்றிய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். சுவாமிநாதன் குழு பரிந்துரைகள், வேளாண் விளைபொருட்களுக்கான விலை நிர்ணயம் குறித்த எம்.எஸ்.சுவாமிநாதன் குழுவின் பரிந்துரைகள், ஒன்றிய அரசால் முழுமையாக அமல்படுத்தப்படவில்லை.
- தோழர் பெ.சண்முகம் மாநிலச் செயலாளர், #CPIM
إرسال تعليق
0تعليقات