வட இந்தியாவில் தமிழர்கள் வீடுகள் இடிப்பு

123
By -
0


தில்லியில் தமிழர்களின் வீடுகளை சட்டவிரோதமாக இடிப்பதை நிறுத்துங்கள்!

தில்லியில் தமிழர்கள் வசிக்கும் மதராஸி குடியிருப்பு பகுதிகளை இடித்து, அங்குள்ள உழைக்கும் வர்க்க மக்களை இடம்பெயரச் செய்யும் புல்டோசர் கொள்கையை எதிர்த்து தில்லி ஜந்தர் மந்தரில் இடதுசாரிக் கட்சிகள் சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு சிபிஐ(எம்) மூத்த தலைவர் பிருந்தா காரத் உரையாற்றினார். 

தேர்தல் அறிக்கையில் குடிசைகள் இருக்கும் இடத்திலேயே உழைக்கும் ஏழைகளுக்கு வீடுகள் கட்டித்தரப்படும் என்ற வாக்குறுதியை பாஜக அளித்தது. தற்போது உரிய மறுவாழ்வுத் திட்டங்கள் இல்லாமல் குடிசைப்பகுதிகள் இடிக்கப்படுகின்றன. 

இவ்வாறு குடிசைகள் இடிக்கப் படுவது பாஜகவின் ஏழைகளுக்கு எதிரான, மக்களுக்கு எதிரான கொள்கையை அம்பலப்படுத்துகிறது. மறுவாழ்வுத் திட்டங்களின்றி குடிசைகள் இடிக்கப்படுவதால் லட்சக்கணக்கான ஏழைகள், கட்டாய மாக மாநகரத்திற்கு வெளியே இடம் பெயர்வதற்கு வற்புறுத்தப்படுகின்றனர். வாழ்வாதாரம் இழந்து பாதுகாப்பின்மை உருவாகியுள்ளது. இது அரசமைப்புச்  சட்டத்தையும் மனித உரிமைகளையும் மீறும் செயலாகும்

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)