தென்காசி அன்னை மறு வாழ்வு முதியோர் காப்பகம் விவகாரம் முழு உண்மை வெளிவருமா?
முதியோர்கள் மட்டுமே இருந்ததாக மீட்கப்பட்ட நிலைமையில் அங்கே இருந்த பள்ளி மாணவ மாணவிகளின் நிலை என்ன?
பள்ளி மாணவ மாணவிகளும் அங்கே தங்கி இருந்ததாக அதன் நிர்வாகி ஒப்புதல் தெரிவித்தும் இதுவரை அங்கிருந்த குழந்தைகளின் நிலை என்ன எனத் தெரியவில்லை?
மாவட்ட நிர்வாகமும் மாவட்ட காவல்துறையும் உரிய விசாரணை நடத்த வேண்டும் என பல்வேறு தரப்பு பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் கடந்த மூன்று நாட்களில் மட்டும் நான்கு பேர் இறந்த நிலையில் இந்த காப்பகத்தில் கடந்த ஒரு வருட காலமாக இருந்தவர்கள் மற்றும் காப்பகத்தை விட்டு வெளியே சென்றவர்கள் காப்பகத்தில் இருந்து இயற்கையாக மரணம் அடைந்தவர்களை பற்றிய முழு விசாரணையையும் மாவட்ட நிர்வாகமும் காவல்துறையும் உரிய முறையில் நடத்த வேண்டும் என பல்வேறு தரப்பிலும் வலுவான கோரிக்கை எழுந்துள்ளது..
إرسال تعليق
0تعليقات