ஏர் இந்தியாவிற்கு ஷோ காஸ் நோட்டீஸ்:

123
By -
0


ஏர் இந்தியாவிற்கு ஷோ காஸ் நோட்டீஸ்:

தனியார் செய்தி தொலைக்காட்சியான ரிபப்ளிக் டிவி  வெளியிட்ட ஆவணங்கள் ஜூன் 3 மற்றும் ஜூன் 5 ஆகிய தேதிகளில் சிவில் விமான போக்குவரத்து இயக்குனரகம் ஏர் இந்தியா நிறுவனத்திற்கு ஷோகாஸ் (show cause) நோட்டீஸ்களை வழங்கியதை வெளிப்படுத்தியுள்ளது.

இதன் மூலம் ஏர் இந்தியாவில் இருக்கக்கூடிய பல விமானங்களில் விமான தகுதி மற்றும் பராமரிப்பு குறித்த கவலைகளை எழுப்பியுள்ளது.

இருப்பினும் இந்த ஷோகாஸ் நோட்டீஸிற்கு ஏர் இந்தியா விமான நிறுவனம் எந்தவித பதிலும் அளிக்கவில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.

தலைமை தொழில்நுட்ப அதிகாரி எஸ்.கே தாசுக்கு அனுப்பப்பட்ட அந்த அறிவிப்பில் ஏர் இந்தியா நிறுவனம் காலாவதியான அவசர உபகரணங்களுடன் விமானங்களை தொடர்ந்து இயக்கியதாக தெளிவுபடுத்தியுள்ளது.

இந்த அறிவிப்புகள் ஏர் இந்தியா நிர்வாகத்தின் தரப்பில் உள்ள குறைபாடுகளை எடுத்துக்காட்டுகிறது.

ஏர் இந்தியாவிற்கு அனுப்பப்பட்ட ஷோகாஸ் நோட்டீஸில் ஏர் இந்தியாவின் தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் நிர்வாக இயக்குனர் கேம்பல் வில்சனின் பெயரும் இடம் பெற்று இருந்தது குறிப்பிடத்தக்கது.

விமானத்தில் இருந்த ஹைட்ராலிக் ஃபெய்லியர்:

விமானத்தில் இருக்கக்கூடிய சில பாகங்கள் தொடர்ந்து சேதமடைந்த நிலையில் அவை மாற்றப்பட்டாலும் இன்ஜின்கள் மாற்றப்படாமல் போதிய பராமரிப்பு இல்லாமல் இருந்ததாக தெரியவந்துள்ளது.

மேலும் முக்கியமாக விமானத்தில் ஏற்கனவே ஹைட்ராலிக் ஃபெய்லியர் மற்றும் இஞ்சின் தொழில் நுட்பக் கோளாறு இருந்தது தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

2023 ஆம் ஆண்டில் ஏர் இந்தியாவின் லண்டன் விமானத்தில் நடு வானில் இஞ்சின் கோளாறு ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது

நேற்று நடந்த இந்த விமான விபத்தில் ஏர் இந்தியா பாதுகாப்பு அம்சங்களை புறக்கணித்து 242 பயணிகளின் உயிருடன் விளையாடியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

அதேபோல் இந்த விமானத்தில் தோராயமாக 58 ஆயிரம் லிட்டர் பெட்ரோல் இருந்ததாகவும் விமானம் விபத்துக்குள்ளான போது தீப்பற்றி எரிந்ததற்கு இது முக்கிய காரணமாகவும் கருதப்படுகிறது.

இதுவரை ஏர் இந்தியா நிறுவனத்திற்கு 15 ஷோகாஸ் நோட்டீஸ்கள் கடந்த இரண்டு மாதங்களில் அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

إرسال تعليق

0تعليقات

إرسال تعليق (0)