மலேசியா வாசுதேவன் பிறந்த நாள் இன்று.

123
By -
0

தென்னிந்திய தமிழ் திரையுலகில் மறைந்த பிண்ணனிப் பாடகர் மலேசியா வாசுதேவன் அவர்களின்  80 வது பிறந்ததினம் இன்று.

     பிறப்பு - 26 - ஜூன் 1944

      இறப்பு -20 -பெப்ரவரி 2011 

தென்னிந்தியத் திரைப்படப் பின்னணிப் பாடகரும் நடிகரும் இசையமைப்பாளருமாவார். இவர் 8000 இற்கும் அதிகமான தமிழ்த் திரைப்பாடல்களைப் பாடியவர்.
     
ராஜகிரி எஸ்டேட், கோலா சிலாங்கர் மாவட்டம், சிலாங்கூர், மலேசியாவில் பிறந்தார் வாசு. பெப்ரவரி 2011 இல் தனது அகவை 66 இல் சென்னையில் மறைந்தார்.
இவரின் வாழ்க்கைத்துணை உஷா.
பிள்ளைகள்:யுகேந்திரன், பிரசாந்தினி, பவித்ரா.வாசு, கேரளத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட மலேசியாவைச் சேர்ந்த சாத்து ஆறுமுகம் நாயர் - அம்மாளு தம்பதியருக்கு எட்டாவது மகனாகப் பிறந்தார். மலேசியாவில் தமிழர் இசைக் குழு ஒன்றில் முக்கிய பாடகராக விளங்கினார்.மலேசியாவில் பல நாடகங்களில் நடித்த அனுபவத்தை நம்பிக்கையாகக் கொண்டு சென்னை வந்தார். திரைப்பட வாய்ப்புகளைத் தேடினார். மலேசியத் தமிழர்கள் கூட்டாகத் தயாரித்த "இரத்தப் பேய்" என்ற தமிழ்ப் படத்தில் முதல் முறையாக நடிகராக அறிமுகமானார். 1970களில் விளம்பர நிறுவனங்களுக்காக 45 ஆவணப் படங்களில் நடித்துள்ளார். 
இளையராஜாவின் "பாவலர் பிரதர்ஸ்" குழுவில் பல மேடைக் கச்சேரிகளில் பாடி வந்தார்.மலேசியா வாசுதேவன் அன்னப்பூரணி (உஷா வாசுதேவன்) ௭ன்ற பெண்ணை 1976 சனவரி 26 அன்று திருமணம் செய்து கொண்டார். இவருக்கு யுகேந்திரன், பிரசாந்தினி மற்றும் பவித்ரா என மூன்று பிள்ளைகள் உள்ளனர். இவருடைய மகன் தமிழ்த் திரைப் படங்களிலும் மற்ற மொழி திரைப்படங்களிலும் நடித்துள்ளார். மேலும் பின்னணிப் பாடகராகவும் திகழ்கிறார். இவருடைய மகள் பிரசாந்தினி ஒரு பின்னணிப் பாடகியாவார். வாரணம் ஆயிரம், ஆடுகளம் போன்ற பல திரைப்படங்களில் பாடல்கள் பாடியுள்ளார்.
ஜி. கே. வெங்கடேஷ் இசையமைப்பில் "பொல்லாத உலகில் ஒரு போராட்டம்" என்ற படத்தில் பாலு விக்கிற பத்மா... என்ற பாடல் மூலம் திரையுலகில் பாடகராக அறிமுகமானார்.

பாரதிராஜா இயக்கத்தில் 16 வயதினிலே படத்தில் கமல்ஹாசனுக்காக 
"ஆட்டுக்குட்டி முட்டையிட்டு..." என்ற இவர் பாடிய பாடல் பெரும் புகழ் பெற்றது.
இப்பாடலை  பாட வேண்டிய எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் சாரீரம்  சரியில்லாத நிலையில் இந்த வாய்ப்பு வாசுவுக்கு கிடைத்தது. இதன் பிறகு ஏராளமான படங்களில் புகழ்பெற்ற பாடல்களைப் பாடினார். கோடைகாலக் காற்றே, அள்ளித் தந்த பூமி, அடியாடு பூங்கொடியே, தங்கச் சங்கிலி,ஒரு தங்கரதத்தில், ஆகாய கங்கை,தேவனின் கோவிலிலே,ஒரு கூட்டுக்குயிலாக,பொன் மானத்தேடி,ஆயிரம் மலர்களே மலருங்கள்,பூங்கொத்து திரும்புமா என இவர் பாடிய பல ஜனரஞ்சக  பாடல்கள் புகழ் பெற்றன.சிவாஜி கணேசனுக்கு டி.எம்.சௌந்தரராஜன் பின்னணி பாடிய  காலத்திற்கு பின் பெரும்பாலான படங்களில் பின்னணி பாடியவர் வாசுதேவனே.முதல் மரியாதை படத்தில் எல்லாப் பாடல்களையும் சிவாஜிக்காக இவரே பாடினார்.
ரஜினிகாந்தின் பல வெற்றி படங்களுக்கு பின்னணி பாடியவர் இவரே. தர்மயுத்தம்,காளி,
சிவப்பு சூரியன் போன்ற படங்களில் ரஜினிக்காக பாடிய பாடல்கள் அனைத்தும் பிரபல்யம்.கமலஹாசனுக்காகவும் அதிக பாடல்கள் பாடியுள்ளார். மலேசியா வாசுதேவன் சிறந்த நடிகராகவும் பல படங்களில் வியாபித்துள்ளார்.
பாரதிராஜாவின்  ஒரு கைதியின் டைரி படத்தில் வில்லனாக நடித்தார். அதன் பின்னர் பல படங்களில் நடிக்கத்  தொடங்கினார். இவர் எண்பத்தைந்து தமிழ்த் திரைப்படங்களில் நடித்துள்ளார். முதல் வசந்தம், ஊர்க்காவலன், 
ஜல்லிக்கட்டு ,குங்குமப் பொட்டு கவுண்டர் என வெற்றிப் படங்கள் பலவற்றில் வில்லனாகவும் குணச்சித்திர வேடத்திலும் நடித்துள்ளார்.
சன் தொலைக்காட்சியில் "சிலந்தி வலை" உட்பட ஏராளமான தொலைக்காட்சித் தொடர்களில் நடித்துள்ளார்.ஆனந்த் என்பவர் இயக்கிய "மலர்களிலே அவள் மல்லிகை" என்ற படத்திற்கு கதை, வசனம் எழுதினார்.
மலேசியா வாசுதேவன் ௭ண்பதுகளில் ஒரு சில தமிழ்த் திரைப்படங்களுக்கு இசையமைத்தார். குறிப்பாக 
சாமந்தி பூ, பாக்கு வெத்தலை மற்றும் ஆயிரம் கைகள் போன்ற திரைப்படங்களுக்கு இசையமைத்தார்.தமிழ் நாடு அரசு இவருக்கு 
கலைமாமணி விருது வழங்கி கௌரவித்தது.

இசையமைத்த திரைப்படங்கள்.
***** **** **** ***** ***** ***** *******
1980- சாமந்தி பூ
1981- பாக்கு வெத்தலை
1984- ஆயிரம் கைகள்
1985- கொலுசு

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)