
EVM மோசடிக்கு மேலும் ஒரு ஆதாரம்..
கன்னியாகுமரி மாவட்டம், தேரூர் பேரூராட்சி, 12-ஆம் வார்டில் காங்கிரஸ் சார்பாக போட்டியிட்ட வேட்பாளர் எஸ்.சுப்புலெட்சுமி சரஸ்வதி-க்கு ஒரு ஓட்டு கூட பதிவாகவில்லை. 2022-ல் நடைபெற்ற இத்தேர்தலில்(நகர்புற உள்ளாட்சி) EVM எந்திரம் பயன்படுத்தப்பட்டுள்ளது; திமுக தலைமையிலான இக்கூட்டணியில் காங்கிரஸ், CPIM, CPI, வி.சி.க, மதிமுக, மமக உள்ளிட்ட 11 கட்சிகள் இணைந்து போட்டியிட்டன.
கன்னியாகுமரியில் திமுக கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், கம்யூனிஸ்டுகளுக்கு கணிசமான வாக்கு வங்கி உள்ளது. திமுக, காங்கிரஸ், CPIM, CPI உள்ளிட்ட கட்சியினர் கை சின்னத்துக்கு அளித்த வாக்குகள் எங்கே?
வேட்பாளர் போட்ட ஓட்டு எங்கே?
அந்த வேட்பாளரின் உறவினர்கள், குடும்ப உறுப்பினர்கள் போட்ட ஓட்டுகளும் மாயமானது எப்படி?
பதிவான 309 ஓட்டில் ஒத்த ஓட்டு கூட திமுக கூட்டணிக்கு பதிவாகாமல் இருக்குமா?
EVM-ல் ஓட்டு திருட்டு நடக்காமல் இது சாத்தியமா?
ஊடகங்களும் அரசியல் கட்சிகளும் இந்த உண்மைகளை திட்டமிட்டு மூடி மறைக்கிறார்கள். உண்மைகளை பரப்புவோம்..
-நந்தினி ஆனந்தன்
ஒருங்கிணைப்பாளர்
மக்களுக்காகப் போராடும் கட்சி | இணைய: banevm.org





