
கல்லை மாவட்ட முத்தமிழ்ச் சங்கம் சார்பாக பாண்டலம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் காமராசர் பிறந்த நாள் விழா மற்றும் அரசு பொதுத் தேர்வில் 10, 11 ,12ஆம் வகுப்பில் முதல் மூன்று இடங்கள் பிடித்த மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா, ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா, என முப்பெரும் விழா நடைபெற்றது.
நிகழ்விற்கு சிறப்புத் தலைவர் சண்முகசுந்தரம் தலைமை தாங்கினார்.தலைவர் முருககுமார் வரவேற்புரையாற்றினார். காப்பாளர் கோமுகி மணியன், பள்ளி தலைமை ஆசிரியை திருநிறைச்செல்லி , அரிமா சங்க மாவட்டத் தலைவர் வேலு, பாண்டலம் ஊராட்சி மன்ற தலைவர் பாப்பாத்தி நடராஜன் , வளர்மதிச்செல்வி,கலைமகள் காயத்ரி, மணிகண்டன்,துரை. கிருஷ்ணமூர்த்தி, கமலநாதன், எம்.ஜி.ராஜா, மணிவேல் ஆகியோர் கலந்துகொண்டனர்.





