
விமான விபத்து – விசாரணை அறிக்கையில் அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
260 பேர் உயிரிழந்த இந்த விபத்தில், விபத்துக்கு சில நிமிடங்களுக்கு முன்பு ஏர் இந்தியா விமானத்தின் என்ஜின்களுக்கு எரிபொருள் விநியோகம் நிறுத்தப்பட்டதாக முதற்கட்ட விசாரணை அறிக்கையில் தெரியவந்துள்ளது.
காக்பிட் குரல் பதிவில், ஒரு விமானி மற்றவரிடம் ஏன் எரிபொருளை துண்டித்தார் என்று கேட்டபோது, மற்ற விமானி அவ்வாறு செய்யவில்லை என்று பதிலளித்தார்.
விபத்துக்கு உண்டான காரணகள் :
1. அகமதாபாத் விமான விபத்துக்கான காரணம் இயந்திரங்களுக்கு எரிபொருள் விநியோகத்தில் ஏற்பட்ட தடை.
2. ஏர் இந்தியா விமானத்தின் இரண்டு இயந்திரங்களும் புறப்பட்ட சில நொடிகளில் செயலிழந்தன.
3. விமானம் உயர முடியாமல் விபத்துக்குள்ளானது.
4. கட்டிடங்கள் மீது விழுந்து தீப்பிடித்ததால் விமானம் முழுமையாக சரிந்தது.
5. 15 பக்க முதற்கட்ட விசாரணை அறிக்கையில் அதிர்ச்சியூட்டும் தகவல்கள்.
ஜூன் 12 அன்று, அகமதாபாத்தில் ஒரு போயிங் 787-8 ட்ரீம்லைனர் விமானம் விபத்துக்குள்ளானது.





