
கள்ளக்குறிச்சி மாவட்டம் வாணாபுரம் வட்டம் ரங்கப்பனூர் ஊராட்சியில் தமிழக முதல்வரின் சீரிய திட்டமான கலைஞரின் கனவு இல்லம் என்ற திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு வரும் வீடுகளையும், முதலமைச்சரின் மறு கட்டமைப்பு மூலம் கட்டப்பட்டு வரும் வீடுகளை ஆய்வு செய்யும் பணிகளையும் மாவட்ட ஆட்சி தலைவர் M.S.பிரசாந்த் ஆய்வு செய்தார்.
ஆய்வின் போது ஊராட்சி மன்ற தலைவர் R.M.S.K.அர்ச்சனா காமராஜன் மற்றும் ரிஷி கன்ஸ்ட்ரக்ஷன் ஒப்பந்ததாரர் அருணகிரி மற்றும் அரசு அலுவலர்கள் S.ராதாகிருஷ்ணன் மற்றும் அய்யப்பன் ஆகியவர்களும் ஒன்றிய பொறியாளர் அரிகிருஷ்ணன் ஒன்றிய பணி மேற்பார்வையாளர் நேரு மற்றும் மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பிரியதர்சினி மற்றும் வட்டார சுகாதார ஒருங்கிணைப்பாளர் சாந்தி இவர்களுடன் ஊராட்சி செயலாளர் மணிமாறன் உடன் இருந்தார்.





