பண்டிதர் ஜவர்கலால் நேரு 135 வது பிறந்தநாள் விழா முன்னிட்டு பள்ளி குழந்தைகளுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டது.

Theechudar - தீச்சுடர்
By -

ரிஷிவந்தியம்

இந்தியாவின் முதல் பாரத பிரதமர் பண்டிதர் ஜவர்கலால் நேரு அவர்களுக்கு நவம்பர் 14 .ம் நாள் 2024 ல் . 135 வது பிறந்தநாள் விழா. இந்திய தேசிய காங்கிரஸ் கள்ளக்குறிச்சி கமிட்டி மாவட்ட தலைவர் சின்ன சேலத்தார் பி எஸ். ஜெய்கணேஷ் வழிகானலில். ரிஷிவந்தியம் வட்டார காங்கிரஸ் தலைவர் எஸ் கிருபானந்தம் தலைமையில் பள்ளி குழந்தைகளுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டது.

Free Latest Tamil News 

கள்ளக்குறிச்சி மாவட்டம் வானாபுரம் வட்டம் ரிஷிவந்தியம் ஒன்றியத்திற்குட்பட்ட வானாபுரம் ஊராட்சியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் பயிலும் மாணவர் மாணவிகளுக்கு இந்தியாவின் முதல் பாரத பிரதமர் பண்டித ஜவர்கலால் நேரு அவர்களின் 135 வது. பிறந்தநாள் விழா 14/11/2024 வியாழக்கிழமை அன்று.

Children's Day 2023: Date, history, significance and celebrations

 

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை.இந்திய தேசிய காங்கிரஸ் கள்ளக்குறிச்சி மாவட்ட கமிட்டி தலைவர் சின்ன சேலத்தார் பி எஸ் ஜெய்கணேஷ் ஆகியோரின் வழிகாட்டுதலின்படி ரிஷிவந்தியம் வட்டார காங்கிரஸ் கமிட்டி வட்டாரத் தலைவர் எஸ் கிருபானந்தம் தலைமையில் வாணாபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு இனிப்புகள் மற்றும் கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டது.

இதையும் படியுங்கள் : சூளாங்குறிச்சி ஸ்ரீ அய்யனார் சாமிக்கு அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியை ரிஷிவந்தியம் காங்கிரஸ் கமிட்டி வடக்கு வட்டாரத் தலைவர் T.அப்பாராசு, பள்ளியின் தலைமை ஆசிரியர் சாந்தா,ரிஷிவந்தியம் நகர காங்கிரஸ் தலைவர் ராதாகிருஷ்ணன், வட்டார செயலாளர் அபிலாஷ் , வட்டார துணைத் தலைவர் செல்வம், ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளியின் ஆசிரியர்கள் பாமா , விக்னேஸ்வரி , ரிஷி வந்தியம் வட்டார காங்கிரஸ் பொதுச் செயலாளர் சக்கரவர்த்தி, மாவட்ட பொது செயலாளர் அவுரியூர் சுப்பிரமணி , பள்ளி சமையலர் பவுனு, உதவியாளர் மணிமேகலை ஆகியோர் கலந்துகொண்டனர்.

தீச்சுடர் செய்தியாளர் ரிஷிவந்தியம்
எஸ் சிவலிங்கம்
 89 25 45 86 93