வாஷிங்டன்: அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள பெர்ன்டேல் பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.0 ஆக பதிவாகியுள்ளது. வடக்கு கலிபோர்னியாவின் கடலோரப் பகுதிகளில் நிலநடுக்கம் உணரப்பட்டது. சுனாமி எச்சரிக்கை விடப்பட்டு பின்னர் வாபஸ் பெறப்பட்டது.
அமெரிக்காவின் கலிபோர்னியாவின் வடக்கு பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.0 ஆக பதிவாகியுள்ளது. நிலநடுக்கத்தால் அங்குள்ள கட்டிடங்கள் குலுங்கின. இதனால் மக்கள் பீதியடைந்து வீடுகளை விட்டு வெளியே ஓடி வந்தனர்.
கடலோரப் பகுதியான கலிபோர்னியாவின் கேப் மென்டோசினா பகுதியில் நிலநடுக்கம் வலுவாக உணரப்பட்டது. சுனாமி எச்சரிக்கையும் விடப்பட்டதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். கடலோர பகுதிகளில் உள்ள மக்கள் உடனடியாக வெளியேற்றப்பட்டனர். எனினும் சிறிது நேரத்தில் சுனாமி எச்சரிக்கை வாபஸ் பெறப்பட்டது. முன்னதாக நிலநடுக்கத்தால் வீடுகளில் இருந்த பொருட்கள் குலுங்கின. இது தொடர்பான காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. நிலநடுக்கத்தை தொடர்ந்து பல இடங்கள் இருளில் மூழ்கின.
இதனால் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கடும் சிரமத்துக்குள்ளாகினர். சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டதையடுத்து, கடலோரப் பகுதிகளில் உள்ள ஹோட்டல்களில் இருந்து மக்கள் வெளியேற்றப்பட்டனர். அதேபோல், சுனாமி வருவதற்கான அறிகுறிகள் தென்படுகிறதா என பலரும் உயரமான கட்டிடங்களில் ஏறி பார்த்தனர். எனினும் சுனாமி எச்சரிக்கை வாபஸ் பெறப்பட்டதை அடுத்து மக்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.
நிலநடுக்கத்தால் சேதம் ஏதும் ஏற்பட்டதா என்பது குறித்து இதுவரை தகவல் இல்லை. நிலநடுக்கம் உணரப்பட்ட பகுதிகளுக்கு மக்களுக்கு தேவையான உதவிகளை வழங்குவதற்காக அவசர குழுக்கள் அனுப்பப்பட்டுள்ளதாக கலிபோர்னியா மாநில அதிகாரிகள் தெரிவித்தனர்.
إرسال تعليق
0تعليقات