கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் ஒன்றியம் , லா கூடலூர் ஊராட்சிக்கு உட்பட்ட சேரந்தாங்கல் கிராமத்தில் உள்ள இஸ்லாமிய சமுதாய இளைஞர்கள் 20 பேருக்கு மேல் திமுகவில் இணைந்தனர். கள்ளக்குறிச்சி மாவட்டம் தெற்கு கழக செயலாளரும், ரிஷிவந்தியம் சட்டமன்ற உறுப்பினருமான வசந்தம் கார்த்திகேயன் BSC, MLA, வின் வழியில், ரிஷிவந்தியம் முன்னாள் ஒன்றிய பெருந்தலைவரும், ரிஷிவந்தியம் ஒன்றியம் தெற்கு கழக செயலாளருமான M. பெருமாள் தலைமையில் வாணாபுரம் பகண்டை கூட் ரோட்டில் அமைந்துள்ள ரிஷிவந்தியம் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில், 25 /06/ 2025 புதன்கிழமை அன்று சேரந்தாங்கல் கிராமத்தில் உள்ள இஸ்லாமிய இளைஞர்கள் திமுக கழகத்தில் இணைந்து கொண்டனர்,
மேலும் இதில் யாகூப் கிளை செயலாளராகவும், ஷேக் முகமது கிளை பிரதிநிதியாகவும், நியமிக்கப்பட்டதோடு, கிளை தலைவர்கள், பொருளாளர்கள் என சபீர், முனாப், நிஜாம், மற்றும் அஷ்ரப், ஆகியோருடன் 20க்கும் மேற்பட்ட இளைஞர்கள் திமுகவில் இணைந்து கொண்டனர், மேலும் இந்நிகழ்ச்சியில் மாவட்ட விவசாய தொழிலாளர் அணி துணை அமைப்பாளர் k. அய்யாசாமி, லாலாபேட்டை திமுக கிளை செயலாளர் முருகன், ஆகியோர் முன்னிலை வகித்தனர். திமுக கழக லா கூடலூர் k. ராமச்சந்திரன், மாவட்ட பிரதிநிதி சண்முகம், மாவட்ட மகளிர் அணி துணை அமைப்பாளர் மாரியம்மாள், ஆகியோர் இதில் கலந்து கொண்டனர்.
மேலும் இதனைத் தொடர்ந்து புதியதாக தி மு க வில் இணைந்து கொண்ட சேரந்தாங்கல் கிராம இஸ்லாமிய சமுதாய இளைஞர்களுக்கு விளையாட்டுப் பொருட்கள் மற்றும் கலைஞர் 1924 - 2023 மாடல் பனியன்களும் வழங்கப்படுமென ரிஷிவந்தியம் ஒன்றிய தெற்கு கழக செயலாளரும், முன்னாள் ஒன்றிய பெருந்தலைவருமான, M. பெருமாள், இளைஞர்களுக்கு உறுப்பினர் படிவம் வழங்கி நன்றி கூறினார்.