ஆசிரியர்களை ஊக்குவிக்கும் வகையில் காசோலை மற்றும் சான்றிதழ்களை கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சித்தலைவர்

a2rsocial
By -

 





கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தேசிய வருவாய் வழி மற்றும் திறனறித் தேர்வில்

மாணவிகளுக்கு சிறப்பாக பயிற்சி அளித்து தேர்ச்சி அடைய செய்த ஆசிரியர்களை ஊக்குவிக்கும் வகையில் காசோலை மற்றும் சான்றிதழ்களை மாவட்ட ஆட்சித்தலைவர்

திரு.எம்.எஸ்.பிரசாந்த், இஆப, அவர்கள் வழங்கினார்

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் தேசிய வருவாய் வழி மற்றும் திறனறித் தேர்வில் மாணவிகளுக்கு சிறப்பாக பயிற்சி அளித்த ஆசிரியர்களுக்கு அரசின் சார்பில் காசோலை மற்றும் பாரட்டுச் சான்றிதழ்களை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த், இஆப, அவர்கள் (24.06.2025)  அன்று வழங்கினார்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஒருங்கிணைந்த பள்ளி கல்வித்துறையின்கீழ் இடைநின்ற மாணவர்களுக்காக கஸ்தூரிபா காந்தி பாலிகா வித்தியாலயா பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் 8ம் வகுப்பு பயிலும் மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் தேசிய வருவாய் வழி மற்றும் திறனறித் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இத்தேர்வில் தேர்ச்சி பெற்று, 9 முதல் 12ம் வகுப்பு வரை அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயின்றால் மாதந்தோறும் 1,000 ரூபாய் ஊக்கத் தொகை வழங்கப்படும்.

அந்த வகையில் 2024-25ஆம் கல்வி ஆண்டில் கஸ்தூரிபா காந்தி பாலிகா வித்தியாலயா பள்ளிகளில் பயின்ற ஒன்பது மாணவிகள் தேசிய வருவாய் வழி மற்றும் திறனறித் தேர்வில் தேர்ச்சி பெற்றனர். மாணவிகளுக்கு சிறப்பாக பயிற்சி அளித்து தேர்ச்சி அடைய செய்த ஆசிரியர்களை ஊக்குவிக்கும் வகையில் 13 ஆசிரியர்களுக்கு தமிழ்நாடு அரசின் சார்பில் தலா ரூ.5000 காசோலை மற்றும் சான்றிதழ்களை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த், இஆப, அவர்கள் வழங்கி ஊக்குவித்தார்.

இந்நிகழ்வில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் திருமதி.க.கார்த்திகா மற்றும்

ஆசிரியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.