தலைப்பு இல்லை
By -
ஜூன் 26, 2025
முதலமைச்சர் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டத்தின் கீழ் முதிர்வுத் தொகை பெறாமல் கண்டறியப்பட இயலாத பயனாளிகள் மொத்தம் 681 நபர்கள் உள்ளனர். இப்பயனாளிகள் இடம் பெயர்ந்து வேறு மாவட்டங்களுக்கும் மற்றும் வேறு ஊர்களுக்கும் சென்று விட்ட காரணத்தினால் சார்ந்த வட்டார விரிவாக்க அலுவலர்கள் மூலம் கண்டறிய இயலவில்லை. இப்பயனாளிகளின் விவரங்கள் (https://kallakurichi.nic.in) மாவட்ட இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. முதிர்வு தொகை பெறாத பயனாளிகள் மாவட்ட இணையதளத்தில் தங்களது விவரங்களை உறுதி செய்து கொண்டு உரிய சான்றுகளுடன் சார்ந்த வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் பணிபுரியும் சமூக நல விரிவாக்க அலுவலர்களை அணுகி முதிர்வுத் தொகை பெற கருத்துரு சமர்ப்பிக்க கோரப்படுகிறது. மேலும் விவரங்களுக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள மாவட்ட சமூக நல அலுவலகத்தை அணுகலாம்என மாவட்ட ஆட்சியர் அறிவுப்பு .
கருத்துருவுடன் இணைக்கப்பட வேண்டிய சான்றுகள்:
1. பெண்குழந்தை பாதுகாப்பு திட்ட வைப்பு தொகை இரசீது,
2. பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் நகல்,
3. பயனாளியின் வங்கி கணக்கு புத்தகம், (With Up to date Bank Entry)
4. பயனாளியின் வண்ணப் புகைப்படம்.
Tags: