கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கைம்பெண்கள், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், ஆதரவற்ற பெண்கள் மற்றும் வறுமைக் கோட்டிற்குக் கீழ் உள்ள பெண்கள் ஆகியோருக்கு தமிழ்நாடு அரசின் மூலம் வாழ்வதாரத்தை மேம்படுத்தும் பொருட்டு மானியத் தொகை பெற விண்ணப்பங்கள் வரவேற்றக்கப்படுகின்றது - மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த், இஆப,அவர்கள் தகவல்.
கைம்பெண்கள், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், ஆதரவற்ற பெண்கள் மற்றும் வறுமைக் கோட்டிற்குக் கீழ் உள்ள பெண்கள் ஆகியோருக்கு 2025-2026-ம் நிதியாண்டிற்கு தமிழ்நாடு அரசின் மூலம் வாழ்வதாரத்தை மேம்படுத்தும் பொருட்டு ரூ.10,000/- அல்லது அதற்கு மேல் மதிப்பிலான உலர் மற்றும் ஈரமாவு அரைக்கும் வணிக ரீதியான எந்திரங்கள் வாங்கும் போது மொத்த விலையில் அல்லது அதிகபட்சமாக ரூ.5,000/- மானியத் தொகையாக பெற தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்றக்கப்படுகின்றது.
இதற்கான விண்ணப்பத்தை https://kallakurichi.nic.in என்ற மாவட்ட இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து உரிய சான்றுகளை இணைத்து 14.07-2025 அன்று மாலை 5.00 மணிக்குள் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள மாவட்ட சமூக நல அலுவலகத்தில் சமர்ப்பிக்க தெரிவிக்கப்படுகிறது. உரிய சான்றுகள் இணைக்கப்படாத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் என்றும் 14.07.2025க்கு மேல் விண்ணப்பங்கள் பெறப்படமாட்டாது என்பதும் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.
விண்ணப்பதாரர்கள் தமிழ்நாட்டில் பூர்விகமாக வசிக்கும் பெண்ணாக இருக்க வேண்டும் பிறப்பிடச் சான்று), வயது வரம்பு 25 வயதிற்கு மேல் இருத்தல் வேண்டும் (பள்ளி கல்வி சான்று), கைம்பெண்கள், ஆதரவற்ற பெண்கள் அல்லது கணவணால் கைவிடப்பட்ட பெண்கள் என்பதற்கான சான்று (வட்டாட்சியரிடமிருந்து பெறப்பட வேண்டும்), ஆண்டு வருமானம் ரூ.1,20,000/-க்குள் இருக்க வேண்டும் (வட்டாட்சியரிடமிருந்து பெறப்பட வேண்டும்), உலர் மற்றும் ஈரமாவு அரைக்கும் எந்திரம் ISI தரமுடைய எந்திரமாக இருக்க வேண்டும்,
மேலும் அதற்கான சான்று மற்றும் எந்திரம் வாங்கியதற்கான விலைப் பட்டியல் (Purchase Bill) விண்ணப்பத்துடன் இணைத்து சமர்ப்பிக்க வேண்டும். கூடுதலாக விண்ணப்பதாரர் ஆதார் அட்டை மற்றும் குடும்ப அட்டை நகல் சமர்ப்பிக்க வேண்டும் போன்ற தகுதி கோட்பாடுகளை பூர்த்தி செய்திருக்க வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த், இஆப, அவர்கள் தெரிவித்துள்ளார்.