
கள்ளக்குறிச்சி மாவட்டம் வாணாபுரம் வட்டாட்சியில் தமிழக அரசின் ஆணைக்கிணங்க பொது மக்களுக்கான பொது விநியோகத் திட்டத்தின் கீழ் பிரதி மாதம் இரண்டாவது வாரத்தில் சனிக்கிழமை குடும்ப அட்டை குறைதீர் சிறப்பு முகாம் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது.
இதன் தொடர்ச்சியாக 2025 ஜூலை மாதத்திற்கான பொது விநியோக திட்ட மின்னணு குடும்ப அட்டை குறைதீர் சிறப்பு முகாம் வட்டார அளவில் 12/07/ 2025 சனிக்கிழமை அன்று காலை 10 மணி முதல், மதியம் ஒரு மணி வரை வாணாபுரம் வருவாய் வட்டாட்சியர் அலுவலகம் வட்ட வழங்கல் பிரிவில் நடைபெற உள்ளது .
இதையும் படியுங்கள் : வெண்டைக்காய் புளிக்குழம்பு 5 நிமிடத்தில் சுவையாக செய்வது எப்படி ?

இது சமயம் பொதுமக்கள் மின்னணு குடும்ப அட்டைகளில், முகவரி மாற்றம், பெயர் திருத்தம், உறுப்பினர் சேர்த்தல், பெயர் நீக்கம், கைப்பேசி எண் இணைத்தல் , மின்னணு குடும்ப அட்டைகளில் குடும்பத் தலைவர் புகைப்படம் பதிவேற்றம், ஆகியவைகளை செய்ய வேண்டி இருப்பதால் பொதுமக்கள் மேற்கண்ட குறைகளுக்குரிய ஆவணங்களுடன் வட்ட வழங்கல் அலுவலகத்தை அணுகி பொதுமக்கள் தங்களது குறைகளை வட்ட வழங்கல் அலுவலகத்தை அணுகி சரி செய்து கொள்ளுமாறு வாணாபுரம் வட்டார பொதுமக்களுக்கு வட்ட வழங்கல் பிரிவு அலுவலர் G. பழனி தெரிவித்துள்ளார்.





