
ரயில்வே கேட்டை கடக்க முயன்றபோது கடலூரில் இருந்து மயிலாடுதுறை சென்ற பயணிகள் ரயில் மோதியதில் பள்ளி வாகனம் உருக்குலைந்தது.கடலூர் அருகே ரயில்வே கேட்டை கடக்க முயன்ற தனியார் பள்ளி வேன் மீது ரயில் மோதியதில் கடலூர் – மயிலாடுதுறை மார்க்கத்தில் ரயில் சேவை பாதிப்பு.
ரயில் மோதியதில் வேன் உருக்குலைந்ததால் பலி எண்ணிக்கை உயரும் என அச்சம்.செம்மங்குப்பத்தில் பள்ளி வேன் மீது ரயில் மோதிய விபத்திற்கு, கேட் கீப்பர் தூங்கியதே காரணம் என அதிர்ச்சி தகவல்.
ரயில்வே கேட்டை மூடாததே விபத்துக்கான காரணம் என முதற்கட்ட விசாரணையிலதகவல் தெரிவிக்க பட்டுள்ளது.





