கல்விசெய்திகள்தமிழகம்

தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கத்தின் சார்பாக மாவட்ட பொதுக்குழு கூட்டம்

 

 

தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கத்தின் சார்பாக  தஞ்சாவூர் மாவட்ட பொதுக்குழு கூட்டமும் மாவட்ட தேர்தலும் நடைபெற்றது.

 

இதில் மாநில பொதுச் செயலாளர் அ. சங்கர் மாநில அமைப்பு செயலாளர்.  க.வெங்கட்ராமன், மாநில இணைச்செயலாளர்   ராஜரத்தினம், புதுக்கோட்டை மாவட்ட செயலாளர் ,  விஜயகுமார் மாவட்டத் தலைவர் அன்பழகன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

 

புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டு உறுதிமொழி எடுத்துக் கொண்டு பதவி ஏற்றுக்கொண்டார்கள்.

 

புதிய மாவட்ட தலைவராக  வீரமணி , மாவட்ட செயலாளராக  சிவசங்கர் ,  மாவட்ட பொருளாளராக சிவ பாஸ்கர் , மாவட்ட அமைப்பு செயலாளராக மாதவன் , மாவட்ட தலைமையிடச் செயலாளர் பிரபு, மாவட்ட மகளிரணி தலைவி செல்வராணி  தேர்வு செய்யப்பட்டார்கள்.

 

கீழ்க்கண்ட தீர்மானங்கள் மாவட்ட பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்டது.

 

1.அரசு உயர்நிலை மேல்நிலை பள்ளிகளில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்களை பட்டதாரி ஆசிரியராக உட்படுத்த வேண்டும்

 

2. மாணவர்கள் நலன் கருதி( 6,7,8 வகுப்பு )அரசு பொதுத்தேர்வில் (10 ,11, 12 வகுப்பு ) அறை கண்காணிப்பாளர் பணியிலிருந்து முழுமையாக விளக்கு அளிக்க வேண்டும்.

 

3. தேசிய கல்விக் கொள்கை 2020 திரும்பப் பெற வேண்டும்.

4. மத்திய அரசுக்கு இணையான ஊதியத்தை இடைநிலை ஆசிரியர்களுக்கு வழங்க வேண்டும்

5. நிறுத்தி வைக்கப்பட்ட உயர்கல்வி ஊக்க ஊதியம் வழங்க வேண்டும்

6. புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்து பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும்

7. காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்

8. தமிழக முதல்வர் தேர்தல் வாக்குறுதியில் கூறியுள்ளவாறு ஜாக்டோ ஜியோ 10 அம்ச கோரிக்கைகளையும் தமிழக அரசு நிறைவேற்ற முன்வர வேண்டும்.

9. ஜூலை 9 இல் நடைபெறும் அகில இந்திய வேலை நிறுத்தத்தில் தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம் முழுமையாக பங்கேற்கும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Related Articles

Back to top button
அழகு குறிப்புகள்: முகம் பொலிவாக இருக்க 7 எளிய Skin Care Tips முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் போக இதசெய்ங்க வங்கி முன் எலும்புக்கூடு Odisha அதிர்ச்சி சம்பவம்! பாய் வீட்டு பிரியாணி செய்வது எப்படி | Muslim Style Chicken Biryani Tamil டி20 WC 39வது போட்டி: ஆப்கானிஸ்தான் மாபெரும் வெற்றி