சென்னை
-ஹேமா வந்தனா
சென்னை: தமிழகத்தில் பல ஆண்டுகளாக சமூக நீதியின் அடையாளமாக விளங்கும் 69 சதவீத இடஒதுக்கீடு தொடர்பான வழக்கு நாளை உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.. தமிழகத்தின் கல்வி, வேலைவாய்ப்பு கட்டமைப்பில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் முக்கியமான நாளாக பார்க்கப்படுகிறது.. 69 சதவீத இடஒதுக்கீடு என்ன, இந்த விவகாரம் நீதிமன்றத்திற்கு செல்ல காரணம் என்ன? நாளை என்ன நடக்கப் போகிறது? இவற்றைப் பற்றி இங்கு சுருக்கமாகப் பார்ப்போம்.
69 சதவீத இடஒதுக்கீடு என்பது தமிழகத்தில் பிற்படுத்தப்பட்ட மற்றும் ஒடுக்கப்பட்ட சமூகங்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் சமூக நீதியை உறுதி செய்வதற்கான முக்கியமான இட ஒதுக்கீடு முறையாகும்.

இட ஒதுக்கீடு 50 சதவீதம்
பொதுவாக இந்தியாவில் 50 சதவீதத்துக்குள் இடஒதுக்கீடு இருக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்ற வழிகாட்டுதல் இருந்தாலும், தமிழகத்தின் சமூகச் சூழல் மற்றும் வரலாற்றுப் பின்னணியைக் கருத்தில் கொண்டு, இம்மாநிலத்தில் மட்டும் 69 சதவீத இடஒதுக்கீடு நடைமுறையில் உள்ளது.
இதில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (BC) 26.5 சதவீதம் மற்றும் பிற்படுத்தப்பட்ட முஸ்லிம்கள் (BCM) 3.5 சதவீதம் மொத்தம் 30 சதவீதம், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மற்றும் பட்டியல் பழங்குடியினர் (MBC/DNC) 20 சதவீதம், பட்டியல் சாதியினர் (SC) 15 சதவீதம் மற்றும் பழங்குடியினர் (SCA) 3 சதவீதம் மற்றும் மொத்தம் 1.8 சதவீதம்
இந்த இடஒதுக்கீடு முறையானது சமூகத்தில் கல்வி மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்களுக்கு அதிகாரம் அளிப்பதையும், அவர்களுக்கு அரசு வேலைகள் மற்றும் உயர்கல்வியில் உரிய பங்களிப்பை வழங்குவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
அரசியலமைப்பின் 9வது அட்டவணை
இதன் காரணமாக 1994ல் தமிழக அரசு தனிச் சட்டம் இயற்றி இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 9வது அட்டவணையில் சேர்த்தது.
சமத்துவத்தை நிலைநாட்ட இடஒதுக்கீடு அவசியம் என்பதை தமிழக அரசு தனது கொள்கையாக முன்னிறுத்தி வருகிறது.. 1992ல் “இந்திரா சஹானி” வழக்கில் அரசியல் சாசனப்படி 50 சதவீத இடஒதுக்கீட்டை தாண்டக்கூடாது என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தாலும், சில தனிச் சூழ்நிலைகளில் இந்த வரம்பை மீறலாம் என நீதிமன்றம் ஏற்கனவே குறிப்பிட்டுள்ளது.
69 சதவீத இட ஒதுக்கீடு
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான அரசு இந்த 69 சதவீத இடஒதுக்கீட்டைப் பாதுகாக்கும் வகையில் தனிச் சட்டம் கொண்டு வந்து இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 9வது அட்டவணையில் சேர்த்தது.
பொதுவாக ஒரு சட்டம் 9வது அட்டவணையில் சேர்க்கப்படும் போது, ஏப்ரல் 24, 1973க்குப் பிறகு சேர்க்கப்படும் சட்டங்கள் அரசியலமைப்பின் அடிப்படைக் கட்டமைப்பைப் பாதித்தால் மட்டுமே நீதித்துறை ஆய்வுக்கு உட்படுத்தப்படும்.
VOICE போன்ற அமைப்புகளும், சில மாணவர்களும் 9வது அட்டவணையில் சேர்க்கப்பட்டுள்ள சட்டத்தை எதிர்த்து, 50 சதவீத வரம்பை மீறுவது பொது மக்களுக்குப் பாதகமானது என்று வழக்கு தொடர்ந்தனர்.
இடைக்கால தடை
இந்த வழக்கின் விசாரணையின் போது, இடஒதுக்கீட்டின் அவசியம் குறித்த தரவு முக்கியமானது என்று நீதிமன்றம் அடிக்கடி கருத்து தெரிவித்தது. நமது தமிழக அரசும் இதற்காக பல்வேறு கமிஷன்களை அமைத்து தகவல் சேகரிக்கும் பணியை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.
கடந்த காலங்களில் தமிழக அரசின் 69 சதவீத இடஒதுக்கீட்டிற்கு இடைக்காலத் தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுத்ததையும் இங்கு குறிப்பிட வேண்டும்.
நாளை உச்ச நீதிமன்றத்தில் என்ன நடக்கும்?
இவ்வாறான சூழலில் இந்த வழக்கு நாளை மீண்டும் விசாரணைக்கு வருகிறது.
எதிர்காலத்தில் மற்ற மாநிலங்களுக்கு அவர்களின் சமூக சூழலுக்கு ஏற்ப இட ஒதுக்கீட்டை தீர்மானிக்கும் அதிகாரம் உள்ளதா என்ற கேள்விக்கும் நாளைய தீர்ப்பு விடையளிக்கும்.. அதுமட்டுமின்றி இந்த வழக்கின் முடிவு தமிழகத்தின் எதிர்கால கல்வி, வேலைவாய்ப்பு கொள்கைகளில் நிரந்தர மாற்றத்தை ஏற்படுத்தும் என ஒட்டுமொத்த மாநிலமே ஆவலுடன் காத்திருக்கிறது…!!
Source link