
அல்வா தரும் அரசியல் வாதிகள் நடுவே விளம்பரம் இல்லாமல் ஓர் சாதனை செய்து வரும் சமூக நல ஆர்வலர்.
சேலம் மாவட்டம் மேட்டூர் வட்டம் மேச்சேரி ஒன்றியம் கச்சராயனூர் ரேஷன் கடையில் சுமார் 450 க்கும் மேற்பட்ட குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் ரேஷன் பொருட்கள் வாங்கி பயன் அடைந்து வருகின்றனர். இதில் சில முதியோர்கள் மற்றும் ஊனமுற்றோர், அரிசி உள்ளிட்ட ஏனைய பொருட்களை எடுத்துச் செல்ல மிகவும் சிரமப்பட்டு வந்தனர். இதனை அறிந்த சேவகன் அறக்கட்டளை சேவகன் சுந்தர்ராஜன் என்பவர் இப்பகுதியில் கடந்த ஆறு மாதகாலமாக ரேஷன் பொருட்களை வீடு தேடி சென்று இலவசமாக கொடுத்து உதவி வருகிறார்.

இதனால் இப்பகுதியில் வாழும் முதியோர்கள்,ஊனமுற்றோர்* மற்றும் ஏழை எளியவர்கள் சிரமமின்றி வாழ்ந்து வருகின்றார்கள் .
இதனால் இப்பகுதியில் சேவகன் சுந்தர்ராஜன் அவர்களுக்கு பொதுமக்கள் ஆதரவு அளித்து, பாராட்டியும் வருகின்றனர்.





