
ரிஷிவந்தியம் அடுத்து லா. கூடலூர், பாவந்தூர் ஆகிய பகுதிகளில் 04/12/2025 அன்று மாலை சுமார் 4.30.மணியளவில் பலமான மழை பெய்தது, மேலும் இதையடுத்து கீழ்ப்பாடி, பாவந்தூர், லா. கூடலூர், சேரந்தாங்கல், மேலத்தேனூர், மற்றும் கீழத்தேனூர், அவிரியூர், ஆகிய பகுதிகளில் பலமான மழை பெய்து வந்த நிலையில் அதன் சுற்றுவட்டார பொது மக்கள் மற்றும் பள்ளி மாணவ,மாணவிகள் பள்ளி படிப்பு முடித்து வரும்போது சேரந்தாங்கல், மற்றும் மேலத்தேனூர்,

கிராம பொதுமக்களுக்கும், பள்ளி மாணவ மாணவிகளுக்கும், போக்குவரத்து பேருந்து இன்றி ஆங்காங்கே நிற்கும் சூழ்நிலை உள்ளது, இதனால் மிகவும் சிரமத்திற்கு ஆளாகியுள்ள நிலையில் அப்போது அந்த பகுதி பொது மக்கள் இந்த 4.30.மணியளவில் போக்குவரத்து பேருந்து இருந்தால் சிறப்பாக இருக்கும் என்றும் மழை மற்றும் வெயில் காலங்களிலும் வசதியாக இருக்கும் என்றும் அப்பகுதிகளுக்கு உட்பட்ட மாணவ, மாணவிகள், மற்றும் கிராம பொது மக்களும் மிகவும் ஏக்கத்தில் உள்ளனர்.
தீச்சுடர். நிரூபர்
S. சிவலிங்கம்.
சேரந்தாங்கல்.








