
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 21 முதல் ஆகஸ்ட் 21 வரை நடைபெறும் என்று மத்திய நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு அறிவித்துள்ளார்.
ஜனாதிபதி திரௌபதி முர்மு இதற்கு ஒப்புதல் அளித்துள்ளார்.

சுதந்திர தின கொண்டாட்டங்களை முன்னிட்டு ஆகஸ்ட் 13 மற்றும் 14 ஆகிய தேதிகளில் இரண்டு நாட்களுக்கு நாடாளுமன்றக் கூட்டத்தொடர் நடைபெறாது என்றும் கிரண் ரிஜிஜு தெரிவித்தார்.
பஹல்காம் தாக்குதல் மற்றும் பாகிஸ்தானுடனான மோதல் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் குறித்து இந்த கூட்டத்தொடரில் சூடான விவாதங்கள் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.





