கோழிக்கோடு மருத்துவக் கல்லூரி காவல் நிலைய போலீசாரால், வடகராவில் உள்ள அவரது உறவினர் வீட்டிலிருந்து ஷிம்ஜிதா முஸ்தபா கைது செய்யப்பட்டார். தீபக்கின் மரணத்துக்குப் பிறகு பதிவு செய்யப்பட்ட வழக்கில், அவர் தலைமறைவாக இருந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
Shimjitha Musthafa ViralVideoCase
தீபக் உயிரிழந்ததற்கு ஆறு நாட்களுக்குப் பிறகு இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த சம்பவம் கடந்த வெள்ளிக்கிழமை நடந்ததாக போலீசார் கூறினர். சமூக ஊடகங்களில் அந்த வீடியோ வைரலானதைத் தொடர்ந்து, தீபக் கடுமையான மன அழுத்தத்தில் இருந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையில், ஷிம்ஜிதா முஸ்தபா கோழிக்கோடு மாவட்ட நீதிமன்றத்தில் முன்ஜாமீன் மனு தாக்கல் செய்திருந்தார். மேலும், அவர் வெளிநாடு செல்வதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாகக் கருதி போலீசார் லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பித்திருந்தனர். அவர் மாநிலத்தை விட்டு வெளியேறியதாகும் அறிகுறிகளும் போலீசாருக்கு கிடைத்ததாக கூறப்படுகிறது.
இந்த விவகாரம் தொடர்பாக, தீபக்கின் தாயார் திங்கள்கிழமை காலை நகர காவல் ஆணையரிடம் புகார் அளித்து, சம்பந்தப்பட்ட பெண் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.
சம்பவம் வெளிச்சத்துக்கு வந்ததையடுத்து, ஷிம்ஜிதா மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பல்வேறு அரசியல் தலைவர்கள் மற்றும் அமைப்புகளும் குரல் எழுப்பினர். இந்த வழக்கு தற்போது தீவிர விசாரணையில் இருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.DeepakSuicideCase, ShymjithaMusthafa, KozhikodeNews, KeralaCrimeNews, PrivateBusIncident, SocialMediaVideoCase, BusHarassmentCase, DeepakDeathCase, ViralVideoCase, JusticeForDeepak, KozhikodePolice, VatakaraArrest, KeralaLatestNews, CrimeNewsKerala, HumanRightsNews, TamilNews, KeralaNews, BreakingNewsTamil



