
கன்னியாகுமரியில் பள்ளி வளாகத்தில் மாணவிகள் மது அருந்தியதாக புகார்!
Kanyakumari Crime News: பள்ளி சீருடையில் மாணவிகள் மது அருந்தியதாக புகார் – விசாரணை தொடக்கம்
கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் இரு மாணவிகள் பள்ளி சீருடையில் மது அருந்தியதாக கூறப்படும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக அதிகாரிகள் விசாரணையை தொடங்கியுள்ளனர்.
பள்ளி வளாகத்திலேயே இந்த சம்பவம் நடைபெற்றதாக கூறப்படுவதால், மாணவர்களின் பாதுகாப்பு மற்றும் பள்ளி நிர்வாகத்தின் கண்காணிப்பு குறித்து கேள்விகள் எழுந்துள்ளன.
சம்பவம் தொடர்பாக பள்ளி நிர்வாகத்திடம் இருந்து விளக்கம் பெறப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

முதற்கட்ட நடவடிக்கையாக அந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியை இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
மாணவிகள் மது அருந்தியதாக கூறப்படும் தகவல் உண்மையா, அதற்கு காரணம் என்ன, பள்ளி வளாகத்திற்குள் மதுபானம் எவ்வாறு கொண்டு வரப்பட்டது என்பன உள்ளிட்ட அம்சங்கள் குறித்து அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.
விசாரணை முடிவில் சம்பவத்தின் முழுமையான பின்னணி தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.





