
எஸ்.கே.டி.ஜே மேல்நிலைப் பள்ளியில் வளரிளம் மாணவியர்களுக்கான சிறப்பு பயிற்சி

எஸ்.கே.டி. ஜே மேல்நிலைப்பள்ளியில் 8 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவியர்களுக்கு வளரின சிறப்பு பயிற்சி வழங்கப்பட்டது. இதில் வளரிளம் பெண்களுக்கான மாதவிடாய் சுழற்சியினால் ஏற்படும் பிரச்சனைகள் மற்றும் அதற்கான தீர்வுகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சி முடிவில் பிராக்டர் அண்ட் கேம்பில் நிறுவனத்தை சார்ந்த ஒருங்கிணைப்பாளர் மூலமாக 8 முதல் 10 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவியர்களுக்கு நாப்கின் வழங்கப்பட்டது.
மேலும் மாணவிகளின் பயன்பாட்டிற்காக கழிவறையில் (இன்சினேட்டர்) நாப்க்கின் எரியூட்டம் மின்இயந்திரம் பொருத்தப்பட்டது. இதனை பள்ளியின் மேனேஜிங் டிரஸ்டி மற்றும் செயலர் திருமிகு ஜெ.சத்ய நாராயணன் பி. இ. அவர்கள் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியிலே பள்ளியின் தலைமை ஆசிரியை திருமதி ஏ.மாணிக்கவள்ளி பங்கேற்றார். இந்த நிகழ்ச்சியினை சிறப்பான முறையில் பள்ளியின் நிர்வாக அலுவலர் டாக்டர் நா. பூபாலமுருகன் அவர்கள் ஏற்பாடு செய்திருந்தார். இதனால் பள்ளியில் பயிலும் ஏறத்தாழ 500 மாணவிகள் பயன்பெறுவர் என்பது குறிப்பிடத்தக்கது.





