செய்திகள்தமிழகம்

காங்கிரஸ் கட்சி சார்பாக திமுக வேட்பாளர் வசந்தம் கார்த்திகேயனுக்கு கிராமம் தோறும் வாக்கு சேகரிப்பு

காங்கிரஸ் கட்சி : கள்ளக்குறிச்சி மாவட்ட ம் காங்கிரஸ் கட்சி சார்பாக திமுக வேட்பாளர் வசந்தம் கார்த்திகேயனுக்கு கிராமம் தோறும் வாக்கு சேகரிப்பு,

கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் ஒன்றியத்தை மையமாக வைத்து இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகையின் ஆணைக்கிணங்க, கள்ளக்குறிச்சி காங்கிரஸ் கட்சியின் மாவட்ட தலைவர் இதயத்துல்லா, தலைமையில்

18 /04/ 2026 அன்று ரிஷிவந்தியத்தை மையமாக வைத்து காலை சுமார் 9 மணி அளவில் கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் தொகுதி திமுக கழக வேட்பாளர் வசந்தம் கார்த்திகேயனுக்கு காங்கிரஸ் கட்சியின் சார்பில் வாக்குகள் சேகரித்து வந்தனர்,

மேலும் காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் மற்றும் காங்கிரஸ் கட்சியின் ரிஷிவந்தியம் நகர, வட்டார, அமைப்புசாரா தொழிலாளர் காங்கிரஸ் கட்சி தலைவர்கள், கிராம காங்கிரஸ் நிர்வாகிகள், அனைவரும் ஒன்றிணைந்து முன்னூருக்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்களில் காங்கிரஸ் கட்சியின் கொடியுடன் சுமார் 60 கிராமங்கள் இருசக்கர வாகனங்களில் சென்று வாக்குகள் சேகரித்தனர்,

இந்நிகழ்ச்சி இறுதியாக பகண்டை கூட்ரோடு சாலையில் காங்கிரஸ் கட்சியினர் பெருந்திரளாக கலந்து கொண்டு பொது மக்களிடையே வாக்குகள் சேகரித்த நிலையில் இந்நிகழ்ச்சி நிறைவு பெற்றது.

தீச்சுடர் செய்தி.
எஸ். சிவலிங்கம்.
ரிஷிவந்தியம் ஒன்றியம்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
பாய் வீட்டு பிரியாணி செய்வது எப்படி | Muslim Style Chicken Biryani Tamil டி20 WC 39வது போட்டி: ஆப்கானிஸ்தான் மாபெரும் வெற்றி ஐயோ பேனா எழுதலன்னு கிரிக்கி பாத்தேன்