
கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் ஒன்றியம் நூரோலை கிராமத்தில் ஊர் பொதுமக்கள் சார்பில் கட்டப்பட்டு வழிபாடு செய்து வந்த அம்மன் கோயில் தேர் திருவிழா 05/07/ 2026 அன்று பொதுமக்கள் அனைவராலும் வழிபாடு செய்யப்பட்டு வணங்கி வந்த நிலையில், சுமார் 30 அடி உயரமுள்ள தேர் பொதுமக்கள் அனைவராலும் இழுக்கப்பட்டு மேளதாளங்கள் வாசிக்கப்பட்டு நூறோலை கிராம தெருக்களில் உள்ள ஒவ்வொரு வீடுகளில் வசிக்கப்படும் குடும்பவாசிகளிடமிருந்து அபிஷேக ஆராதனைகள் பெற்றுக்கொண்டு பூஜைகள் செய்யப்பட்டன.
இந்த நிகழ்ச்சியில் ரிஷிவந்தியம் காவல் ஆய்வாளர் தலைமையில் ரிஷிவந்தியம் சிறப்பு காவலர் மற்றும் காவலர்கள் வேல்முருகன், மணிகண்டன், சுந்தரமூர்த்தி, மணிகண்டன், ஆகியவர்கள் கலந்து கொண்ட நிலையில் விழாவிற்கு பாதுகாப்பு தந்து சிறப்பித்தனர். மேலும் இந்த நிகழ்ச்சியில் தியாகதுருகம் கிளை மின்சார பணியாளர்கள் கலந்து கொண்டு மின் இணைப்பு உதவி புரிந்தனர்.இதனால் இந்த தேர்த்திருவால் நூரோலை கிராமம் கோலாகலமாக காணப்பட்டது.
தீச்சுடர்.
ரிஷிவந்தியம் ஒன்றியம்





