
பகுதி நேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று போராட்டம்.

பகுதி நேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று போராட்டம் நடக்கும் இதே நேரத்தில் பார்வை மாற்று திறனாளி தம்பதிக்கு வளைகாப்பு நடத்தி நெஞ்சை நெகிழவைத்த சம்பவம்.

சமீபத்தில் மறைந்த பகுதி நேர ஆசிரியரின் குடும்பத்திற்கு மாவட்ட வாரியாக பகுதி நேர ஆசிரியர்கள் இடையே வசூல் செய்து 15,000/-₹ மற்றும் 50,000/-₹ என மேலும் தனித்தனியாக ஜீபே செய்தும் உதவிய பகுதி நேர ஆசிரியர்கள். தமிழக அரசோ குடித்து இறந்தால் பத்து லட்சம் நிவாரணம் வழங்கும். ஆனால்…
ர்
பகுதி நேர ஆசிரியர் விபத்தில் இறந்ததற்கு ஒரு இரங்கல் கூட தெரிவிக்கவில்லை.
மக்களை தேடி சென்று சந்திக்கும் முதல்வர் ஆட்சிக்கு வந்ததிலிருந்து பகுதி நேர ஆசிரியர்களை ஒரே ஒரு முறை கூட சந்திக்க வில்லை.
இருப்பினும் பகுதி நேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்து மனம் தளராமல் போராடி வருகின்றனர்.
தமிழக காவல்துறை இதுவரை இரண்டாயிரத்துக்கு மேற்ப்பட்ட பகுதி நேர ஆசிரியர்கள் மீது வழக்கு மட்டுமே பரிசாக தொடுத்துள்ளது.
இதே வேலையில் பகுதி நேர ஆசிரியர்கள் போராட்டத்தின் நடுவே தாங்கள் சிறைபட்டிருக்கும் மண்டபத்தின் உள்ளேயே இந்த வளைகாப்பு நிகழ்ச்சியை நடத்தி தமிழக மக்களிடையே ஒரு வியப்பையும் நெகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளனர்.





