சென்னை
ஓய்-ஹேமா வந்தனா
சென்னை: தமிழ்நாடு மின்சார வாரிய டெண்டர்களில் உள்ள முறைகேடுகளை நீக்க புதிய டிஜிட்டல் முறையை அமல்படுத்த அமைச்சர் நிர்மல்குமார் உத்தரவிட்டுள்ளார். சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்ற ஒப்பந்ததாரர்களுடனான சந்திப்பில், இனிமேல் அனைத்து பணிகளும் மறைக்காமல் தகுதி அடிப்படையில் வழங்கப்படும் என்றும், இடைத்தரகர்களுக்கு இடமளிக்காத வகையில் புதிய நிர்வாக நடைமுறைகளை அமல்படுத்த அரசு தீவிரம் காட்டி வருவதாகவும் அமைச்சர் உறுதி அளித்துள்ளார்.
தமிழ்நாடு மின்சார வாரியத்தின் செயல்பாடுகளில் வெளிப்படைத்தன்மையை ஏற்படுத்தவும், முறைகேடுகளை முற்றிலும் தவிர்க்கவும் அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.

தமிழ்நாடு மின்சார வாரியம்
இதன் ஒரு பகுதியாக, மின்சார வாரியத்துடன் தொடர்புடைய ஒப்பந்ததாரர்கள், மின் உபகரண விநியோகஸ்தர்கள் மற்றும் முதலீட்டாளர்களுடனான ஆலோசனைக் கூட்டம் சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்றது. மின்துறை அமைச்சர் நிர்மல்குமார் தலைமையில் நடைபெற்ற இந்த முக்கிய கூட்டத்தில், மின் துறையில் மேற்கொள்ள வேண்டிய சீர்திருத்தங்கள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது.
இந்தக் கூட்டத்தில் பல்வேறு தரப்பினரும் தங்களது கருத்துகளையும் கோரிக்கைகளையும் முன்வைத்தனர். குறிப்பாக வடசென்னை அனல் மின் நிலைய ஒப்பந்ததாரர்கள் பேசுகையில், தற்போதைய சூழலில் நிலக்கரி கையாளுதல் உள்ளிட்ட அனைத்து பணிகளையும் ஒரே நிறுவனத்திடம் ஒப்படைத்துள்ளதால் சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது.
எனவே, இதுபோன்ற பணிகளை பரவலாக்கம் செய்து அனைத்து நிறுவனங்களுக்கும் சம வாய்ப்புகளை உருவாக்க வேண்டும் என வலியுறுத்தினர்.
சூரிய சக்தி திட்ட முதலீட்டாளர்கள்
மேலும் சூரிய சக்தி திட்ட முதலீட்டாளர்கள் தங்கள் கவலைகளை பகிர்ந்து கொண்டனர். சூரிய ஒளி மின் திட்டங்களுக்கான விண்ணப்பங்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்கவும், விரைவில் அனுமதி வழங்கவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
2019க்கு பிறகு சூரிய ஒளி மின் திட்டங்களை ஈர்க்கும் வகையில் தெளிவான கொள்கை வகுக்கப்படவில்லை என்றும், முதலீட்டாளர்களை ஊக்குவிக்கும் வகையில் புதிய கொள்கையை அரசு உடனடியாக வெளியிட வேண்டும் என்றும் அவர்கள் கூறினர்.
அமைச்சர் நிர்மல் குமார்
அனைத்து தரப்பினரின் கருத்துக்களையும் உன்னிப்பாக கேட்டறிந்த அமைச்சர் நிர்மல் குமார், மின்துறையில் நடக்கும் முறைகேடுகளை களைவதே தற்போதைய அரசின் முதன்மை நோக்கம் என உறுதிபட தெரிவித்தார்.
தொடர்ந்து, நிர்மல்குமார் பேசுகையில், “”கடந்த காலங்களில் வழங்கப்பட்ட அனைத்து டெண்டர்களும் மறு ஆய்வு செய்யப்படும். வரும் காலங்களில் முற்றிலும் வெளிப்படைத்தன்மையுடன் கூடிய புதிய டெண்டர் நடைமுறைகள் கொண்டு வரப்படும்.
மின்சார வாரியம் ஒரு பைத்தியக்கார விசுவாசி
மின்சார வாரியத்தின் ஒவ்வொரு பிரிவிலும் தனித்தனி குழுக்கள் அமைக்கப்பட்டு, டிஜிட்டல் போர்டல் மூலம் விண்ணப்பங்கள் மற்றும் ஒப்பந்தங்கள் செயல்படுத்தப்படும். இதன் மூலம் எந்தவொரு தனிநபருக்கும் அல்லது குறிப்பிட்ட நிறுவனத்திற்கும் சாதகமாக இருக்கும் பழைய முறை முற்றிலும் ஒழிக்கப்படும்.
தகுதியான அனைவருக்கும் சம வாய்ப்பு வழங்குவதை இந்த அரசு நோக்கமாகக் கொண்டுள்ளது. “தற்போதைய ஆட்சியில் இடைத்தரகர்களுக்கோ, முறைகேடுகளுக்கோ இடமில்லை.. அனைத்து ஒப்பந்ததாரர்களுக்கும் தகுதியின் அடிப்படையில் வெளிப்படைத்தன்மையுடன் டெண்டர் விடப்படும். மின் வாரிய நிர்வாகத்தை ஊழலற்ற நிர்வாகமாக மாற்ற அரசு உறுதியாக உள்ளது,” என்றார்.
இந்த புதிய சீர்திருத்தங்கள் மின் வாரியத்தின் செயல்பாட்டில் மிகப்பெரிய மாற்றத்தை கொண்டு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது…!!
Source link

